மேலும் அறிய

செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரம் அழிப்பு - அமலாக்கத்துறை பகிரங்க குற்றச்சாட்டு

”செந்தில் பாலாஜி வழக்கில்  தினமும் ஆதார அழிப்பு நடக்கிறது. காலம் தாழ்த்தும் ஒவ்வொரு மணித்துளியும் வழக்கின் தன்மையை நீர்த்து விடும்”


செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதார அழிப்பு நடப்பதாக உச்சநீதிமன்றத்தில் பகிரங்கமாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

கடுமையான குற்றச்சாட்டு வைத்த அமலாக்கத்துறை

அரசு போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது இதயத்தில் இருந்த அடைப்புக்காக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை எடுத்து வரும் நிலையில் அவரின் வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த மாதம் அமலாக்கத்துறை கைது செய்ய முயன்ற போது நெஞ்சு வலியால் துடித்த செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் காவிரி மருத்துவமனைக்கு  மாற்றப்பட்டார். இந்த சூழலில் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. அதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சூரிய காந்த் அமர்வில் தொடங்கியது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. 

தினமும் ஆதார அழிப்பு நடக்கிறது

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதாலும், அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் தங்களின் கடமையை செய்யமுடியாத சூழலில் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி செல்வாக்குமிக்க நபராக இருப்பதால் விசாரணையை தாமதப்படுத்தினால், வழக்கின் தன்மை நீர்த்து போகும் என்ற அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி வழக்கில்  தினமும் ஆதார அழிப்பு நடப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. காலம் தாழ்த்தும் ஒவ்வொரு மணித்துளியும் வழக்கையின் தன்மையை வீணாக்கி விடும் என்றும் கூறியுள்ளது. 

ஒருவாரத்தில் 3வது நீதிபதியை அமைக்க வேண்டும்

மேலும் செந்தில் பாலாஜி ஏற்கெனவே நீதிமன்ற காவலில் இருப்பதால் அவர் மீது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை என சுட்டிக்காட்டியதுடன், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு நீதிமன்றம் தான் தீர்வு காண வேண்டும் என முறையிடப்பட்டுள்ளது. அதேநேரம், செந்தில்  பாலாஜி தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில், சென்னை உயர்நீதிமன்றதில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், 3வது நீதிபதியின் தீர்ப்புக்கு பிறகு அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டை விசாரிக்கலாம் என்ற வாதத்தை முன்வைத்தனர். 

இருதரப்பு வாதத்தையும் கேட்ட பிறகு, ஒரு வார காலத்திற்குள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுமட்டுமில்லாமல், வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்கவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தலால் செந்தில் பாலாஜி வழக்கில் விரைவில் 3வது நீதிபதியின் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget