மேலும் அறிய

சாம்சங் தொழிலாளர் போராட்டம்; 'ஒடுக்கும் அரசு- மே தினத்தில் மட்டும் சிவப்பு சட்டை அணியும் ஸ்டாலின்'- ஈபிஎஸ் கண்டனம்

குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா திமுக அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்?- ஈபிஎஸ்

முதல்வர் ஸ்டாலின் மே தினத்தன்று மட்டுமே சிவப்பு சட்டை அணிவதாகவும் உண்மையிலேயே அதன்மீது அக்கறை இருக்குமானால், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளளர்- நிறுவனம்- அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

பேருந்தில் சோதனை, நள்ளிரவில் வீடு புகுந்து கைது

இந்த நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன்.

அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா திமுக அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்? போராட்டங்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் ஸ்டாலின்

உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE OCT 9: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!
சேதுபதி கட்டிய கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
சேதுபதி கட்டிய கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
ஜம்மு காஷ்மீரில் 2  ராணுவ வீரர்கள் கடத்தல்: பயங்கரவாதிகளை விடுவிக்க சதியா.! நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்: பயங்கரவாதிகளை விடுவிக்க சதியா.! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thalavai Sundaram Removed From ADMK | தளவாய் நீக்கப்பட்டது ஏன்?தூக்கியடித்த EPS..தூண்டில் போடும் BJPPolice Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சிJammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE OCT 9: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.!
சேதுபதி கட்டிய கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
சேதுபதி கட்டிய கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
ஜம்மு காஷ்மீரில் 2  ராணுவ வீரர்கள் கடத்தல்: பயங்கரவாதிகளை விடுவிக்க சதியா.! நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்: பயங்கரவாதிகளை விடுவிக்க சதியா.! நடந்தது என்ன?
ஹரியானா தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்: ஜம்மு காஷ்மீர் தோல்வி குறித்து சொன்னது என்ன தெரியுமா?
ஹரியானா தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்: ஜம்மு காஷ்மீர் தோல்வி குறித்து சொன்னது என்ன தெரியுமா?
TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
கரூர்: புரட்டாசி மாத பஞ்சமி திதி: வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
கரூர்: புரட்டாசி மாத பஞ்சமி திதி: வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
Haryana Election 2024: ஹரியானா தேர்தல் வெற்றி - பாஜகவின் புதிய மந்திரம், 4 மாநிலங்களில் ஜாக்பாட், தென்னிந்தியாவில் அவுட்
Haryana Election 2024: ஹரியானா தேர்தல் வெற்றி - பாஜகவின் புதிய மந்திரம், 4 மாநிலங்களில் ஜாக்பாட், தென்னிந்தியாவில் அவுட்
Embed widget