மேலும் அறிய

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு, நிதி, சலுகைகள்: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு, நிதி, சலுகைகள் 2என பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு, நிதி, சலுகைகள் 2என பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் முதல்வர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கவனம்‌ மிகுதியாகத்‌ தேவைப்படுவோரில்‌ குறிப்பிடத்தக்க பிரிவினர்‌ மாற்றுத்திறனாளிகள்‌ ஆவார்கள்‌. மாற்றுத்திறனாளிகளின்‌ உரிமைகளைக்‌ காக்கவும்‌ அவர்கள்‌ சமுதாயத்தில்‌ சமநிலையில்‌, சுயமரியாதையுடன்‌ வாழும்‌ நிலையினை உறுதி செய்யவும்‌ 2011-ஆம்‌ ஆண்டில்‌ கலைஞரால்‌ இது தனித்துறையாக உருவாக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள்‌ மீது சிறப்புக்‌ கவனத்தோடு இத்துறையை நானும்‌ எனது தனி கவனிப்பில்‌ வைத்திருக்கிறேன்‌.

* நமது அரசு பொறுப்பேற்றவுடன்‌, மாற்றுத்திறனாளிகள்‌ பராமரிப்பு உதவித்தொகை ரூபாய்‌ ஆயிரத்திலிருந்து உயர்த்தப்பட்டு, தற்போது ரூபாய்‌ இரண்டாயிரம்‌ வழங்கப்படுகிறது. இதனால்‌, 2 இலட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத்திறனாளி பயனாளிகள்‌ பயனடைந்து வருகின்றனர்‌.

* மனவளர்ச்சி குன்றிய மற்றும்‌ புற உலகச்‌ சிந்தனையற்ற குழந்தைகளின்‌ பெற்றோர்களுக்குத்‌ தொழில்‌ தொடங்க உதவி செய்ய, குறைந்தபட்சக்‌ கல்வி தகுதியினை எட்டாம்‌ வகுப்புத்‌ தேர்ச்சியாக குறைத்தும்‌, வயது உச்ச வரம்பை 45-லிருந்து 55 ஆக உயர்த்தியும்‌ ஆணையிடப்பட்டுள்ளது.

* மாற்றுத்திறனாளிகள்‌ துணையாளர்‌ ஒருவருடன்‌ கட்டணமின்றி நகரப்‌ பேருந்துகளில்‌ பயணம்‌ செய்ய ஏதுவாக உத்தரவிடப்பட்டுள்ளது.

* உதவித்தொகை மற்றும்‌ உதவி உபகரணங்கள்‌ வேண்டி காத்திருப்போர்‌ அனைவருக்கும்‌ நிலுவையின்றி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தும்‌ நமது அரசால்‌ ஆணையிடப்பட்டுள்ளது.

* வீடு வழங்கும்‌ திட்டத்தில்‌ வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு 5 விழுக்காடு வீடுகள்‌ வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதேபோல்‌ வீட்டு மனைப்‌ பட்டா வழங்குவதற்கும்‌ ஆணை வழங்கப்பட்டுள்ளது.

* சிறப்புப்பள்ளிகள்‌ மற்றும்‌ ஆரம்பநிலைப்‌ பயிற்சி மையங்களில்‌ பணியாற்றும்‌ ஆயிரத்து 294 சிறப்பாசிரியர்கள்‌ மற்றும்‌ தசைப்‌ பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம்‌ ரூபாய்‌ 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம்‌ ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

* சென்னை மாவட்டத்தில்‌ ஒரு அலுவலகம்‌ ஒரு கோடியே 51 லட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ அமைக்கப்பட இருக்கிறது.

* சாலை ஓரங்களில்‌ வியாபாரம்‌ செய்வதற்காகத்‌ தள்ளுவண்டி கடை நடத்துவதற்கான சான்றிதழ்களை முன்னுரிமை அடிப்படையில்‌ வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

*  திருமண நிதியுதவியானது இனிமேல்‌ முழுமையாக ரொக்கமாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

* அரசு வளாகங்களில்‌ மாற்றுத்திறனாளிகள்‌ ஆவின்‌ பாலகம்‌ அமைக்கத்‌ தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு, நிதி, சலுகைகள்: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..

* ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள்‌ நல வாரியம்‌ மற்றும்‌ ஆலோசனை வாரியம்‌ மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

* அனைத்து மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ முக்கிய நிகழ்வுகளின்‌போது செவித்திறன்‌ பாதிக்கப்பட்டோர்‌ பயன்பெறும்‌ வகையில்‌, சைகை மொழிபெயர்ப்பாளர்‌ வசதி மாவட்ட நிர்வாகம்‌ மூலம்‌ செய்து தர ஆணையிடப்பட்டுள்ளது.

* மாற்றுத்திறனாளிகளின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வேலைவாய்ப்புகளில்‌ 4 விழுக்காடு இட ஒதுக்கீடும்‌, தனியார்‌ துறைகளிலும்‌ வேலை வாய்ப்பினை ஏற்படுத்த அவர்களுக்கு உகந்த பணியிடங்களைக்‌ கண்டறிய வல்லுநர்‌ குழு அமைத்தும்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* மாவட்ட அளவில்‌ சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள்‌ அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான முறையில்‌ வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய, உயர்மட்டக்‌ கண்காணிப்பு குழுவும்‌ அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* மாற்றுத்‌ திறனாளிகளுக்குப்‌ பொது இடங்களில்‌ தடையற்ற சூழலை அமைக்கும்‌ நடவடிக்கையாக, சாய்தளப்‌ பாதை, மின்தூக்கி பொருத்துதல்‌, மாற்றுத்‌ திறனாளிகளுக்கான கழிவறை, பார்வையற்றோர்‌ பயன்பாட்டிற்காக தரைத்‌ தளங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

* செவித்திறன்‌ குறைபாடு உடையோருக்கு தகவல்‌ பரிமாற்றம்‌ செய்ய தகவல்‌ பலகைகள்‌, சைகை மொழி பெயர்ப்பாளர்கள்‌ நியமனம்‌ போன்ற வசதிகள்‌ செய்ய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளைக்‌ கண்டறிவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடைய (Standard Operating Procedure (501) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

* மாற்றுத்‌ திறனாளிகளுக்கான உரிமைகள்‌ திட்டம்‌ உலகவங்கி நிதியுடன்‌ ஆயிரத்து 763 கோடியே 19 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ துவங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில்‌, அனைத்து மாவட்டங்களிலும்‌ இந்தத்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌.

* மாற்றுத்திறனாளிகளின்‌ திறன்‌ மேம்பாடு மற்றும்‌ சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும்‌, அரசின்‌ தற்போதுள்ள திட்டங்களுடன்‌ ஒருங்கிணைத்து இதர அரசுத்‌ துறைகளின்‌ மூலம்‌ தொழில்திறன்‌ பயிற்சியும்‌ அளிக்கப்படும்‌.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget