மேலும் அறிய

புதுச்சேரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: போக்குவரத்து மாற்றம் - எந்தெந்த இடத்தில் தெரிஞ்சிகோங்க

புதிய நீதிமன்ற வளாகம் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்தின் பணிகள் தொடங்குவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி: புதிய நீதிமன்ற வளாகம் அருகே கடலூர் சாலையில் அமைக்கப்பட உள்ள ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்தின் பணிகள் தொடங்குவதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் 

புதிய நீதிமன்ற வளாகம் அருகே கடலூர் சாலையில் அமைக்கப்பட உள்ள ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்குவதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை கண்காணிப்பாளர் நித்தியா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

புதுச்சேரி புதிய நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள கடலூர் சாலையில் அமைக்கப்பட உள்ள ரயில்வே மேம்பாலம் (ROB) கட்டுமானத்தின் முதல் கட்ட பணிகள் வரும் 31.07.2025 (வியாழக்கிழமை)  முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் சாலை பயணிகளின் நலன் கருதி, புதுச்சேரி, போக்குவரத்து காவல் துறையினரால் கீழ்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் வரும் 31.07.2025 (வியாழக்கிழமை) காலை முதல் அமல்படுத்தப்படுகின்றன.

கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கடலூர் சாலையில் வரும் அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள், பேருந்துகள் உட்பட, மரப்பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 100 அடி சாலை வழியாக இந்திரா காந்தி சதுக்கம் நோக்கிச் செல்ல வேண்டும். பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்களும் மரப்பாலம் சந்திப்பைக் கடந்து முதலியார்பேட்டை நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. ஆனால் அவசரகால வாகனங்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் போன்றவை முதலியார்பேட்டை விநாயக முருகன் டீக்கடை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை வழியாக சோனாம்பாளையம் சந்திப்பு நோக்கி செல்ல வேண்டும்.

மரப்பாலத்திலிருந்து வெங்கட சுப்பரெட்டியார் சிலை நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், வழக்கமான கடலூர் சாலையை பின்பற்றி, ஏ.எஃப்.டி ரயில்வே கிராசிங் வரை சென்று, பின்னர் புதியதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை வழியாக பயணிக்க வேண்டும். வெங்கட சுப்பைரெட்டியார் சிலை சந்திப்பில் இருந்து முதலியார்பேட்டை நோக்கி கடலூர் சாலையில் பயணிக்கும் பேருந்துகள், நடுத்தர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், புதிய நீதிமன்ற வளாகம் அருகே சிறிது வலதுபுறமாக திரும்பி, கடலூர் சாலையில் பிரிக்கப்பட்ட சாலை வழியாக பயணிக்க வேண்டும். 

நீதிபதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக ஊழியர்கள் அனைவரும் நீதிமன்ற வாயில் எண். 1 வழியாக நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் வெளியே செல்லும்போது, பிரதான வாயிலில் இடதுபுறம் திரும்பி புதிய சிமென்ட் சாலையில் வெங்கட சுப்பரெட்டியார் சிலை சந்திப்பை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நீதிமன்ற அனைத்து வழக்கு சம்மந்தப்பட்டவர்களும் பொதுமக்களும் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் நீதிமன்ற வாயில் எண்.2 ஐ பயன்படுத்த வேண்டும். அவர்கள் வெளியே செல்லும்போது, நீதிமன்ற வாயில் எண்.2 வழியாக புதிய சிமென்ட் சாலையின் பிரதான வாயிலில் இடதுபுறம் திரும்பி வெங்கட சுப்பரெட்டியார் சிலை சந்திப்பை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வழக்கம் போல் வனத்துறைக்கு செல்லலாம். அவர்கள் வெளியே வரும்போது, பிரதான வாயிலில் இடதுபுறம் திரும்பி புதிய சிமென்ட் சாலையில் சென்று வெங்கட சுப்பரெட்டியார் சிலை சந்திப்பை அடையவேண்டும்.

எனவே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மேற்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை கடைப்பிடித்து மேற்படி ரயில்வே மேம்பாலப் பணிகள் முடியும் வரை புதுச்சேரி போக்குவரத்து காவல் துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget