பெரியபாளையத்தில் 8 உயிர்களைக் குடித்த வழக்கில் ஃபேக்டரி ஓனர் புழல் சிறையிலடைப்பு
பெரியபாளையம் அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா கசிவு வழக்கு – தொழிற்சாலை உரிமையாளர் உட்பட 3 பேர் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு.

பெரியபாளையம் அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா கசிவு வழக்க்கில் தொழிற்சாலை உரிமையாளர் உட்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று அமோனியா வாயு கசிந்து 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை 8 வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் தொழிற்சாலையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரியபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பெரியபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறால் தொழிற்சாலையின் உரிமையாளர்களான சென்னையைச் சேர்ந்த மோகன் (59) ஜோசப் ஜெகன் (48) மேலாளர் டேனியல் (68) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். இந்நிலையில் இன்று உரிமையாளர் உட்பட மூன்று பேரையும் காவல்துறையினர் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு 3 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவானது வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரும் புழல் சிறைக்கு அழைத்து சொல்லப்பட்டனர்.
அமோனியா கசிவு உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்து இறால்களை சேமிப்பு கிடங்குக்கு மாற்றும் பணிகள் தொடங்கின. அந்த தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு துறை, மருத்துவ துறையினர், உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர். இப்போது இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 250 டன் இறால் இருப்பு வைத்துள்ள நிலையில், மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வகத்திற்கு எடுத்து சென்றனர்.
முதற்கட்டமாக 10 டன் இறால்களை கண்டெய்னரில் ஏற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. மாதிரிகளின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Before You Go
Minister Keerthana: "நானும் அரசுப்பள்ளி மாணவிதான்! வீடியோவை நான் எடுக்கல” அமைச்சர் கீர்த்தனா பதிலடி
ட்ரெண்டிங் செய்திகள்






















