மேலும் அறிய

Rajiv Case Timeline: 1991 ஜூன் 11 முதல் 2022 மார்ச் 9 வரை... அறிவு... பேரறிவாளன் ஆன டேட்டா இதோ!

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கும் நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதையை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கும் நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதையை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.  

 

1991 மே 21:  சென்னை ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி வந்தார். அவர் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 


Rajiv Case Timeline: 1991 ஜூன் 11 முதல் 2022 மார்ச் 9 வரை... அறிவு... பேரறிவாளன் ஆன டேட்டா இதோ!

1991 ஜூன் 11:  பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். 

1991 ஜூன் 14: நளினி கைது செய்யப்பட்டார்.  

1991 ஜூலை 22: சுதேந்திரராஜா என்ற சாந்தன் கைது செய்யப்பட்டார். 

1998 ஜனவரி 28: வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கில் சம்பந்தப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. 


Rajiv Case Timeline: 1991 ஜூன் 11 முதல் 2022 மார்ச் 9 வரை... அறிவு... பேரறிவாளன் ஆன டேட்டா இதோ!

1999 மே 11: நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 
சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கு அளிக்கப்பட்ட, தூக்குத் தண்டனையை மட்டும் உறுதிப்படுத்தியது. இதில், 19 பேர் தண்டனைக் காலத்தை முடித்ததாகக் கூறி விடுவிக்கப்பட்டனர். அதே போல,  ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.


1999 அக்டோபர் 8:  சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வரும், தங்களது தூக்குத் தண்டனையாக ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமெனக் கோரி நால்வரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செயதது. 


Rajiv Case Timeline: 1991 ஜூன் 11 முதல் 2022 மார்ச் 9 வரை... அறிவு... பேரறிவாளன் ஆன டேட்டா இதோ!


1999 அக்டோபர் 10:  தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். 

1999 அக்டோபர் 29: ஆளுநர் பாத்திமா பீவி இந்தக் கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார். இதனையடுத்து நால்வரும் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகக் கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினர். 

1999 நவம்பர் 25: ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் அமைச்சரவை மீதே ஆளுநர் முடிவெடிக்க வேண்டுமெனக் கூறியது.

2000 ஏப்ரல் 19:  இந்த விவகாரம் குறித்து, மு.கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில்  நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது. 

2000 ஏப்ரல் 26: நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசு தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். 

 


Rajiv Case Timeline: 1991 ஜூன் 11 முதல் 2022 மார்ச் 9 வரை... அறிவு... பேரறிவாளன் ஆன டேட்டா இதோ!

2000 முதல் 2007 ஆம் ஆண்டுகளின் கால இடைவெளியில் குடியரசுதலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் அனுப்பப்பட்ட கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர். 

2006 செப்டம்பர் 14: 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனை கைதிகளாக விடிவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இருப்பினும், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு இதில் விடுதலை கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து நளினி நீதிமன்றத்தை நாடினார். 

2008 செப்டம்பர் 24: நளினியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத்தொடர்ந்து மேல் முறையீட்டிலான மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

2007: பிரதீபா பாட்டீல் குடியரசு தலைவராக இருந்த காலக்கட்டத்திலும் இந்த கருணை மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. 


Rajiv Case Timeline: 1991 ஜூன் 11 முதல் 2022 மார்ச் 9 வரை... அறிவு... பேரறிவாளன் ஆன டேட்டா இதோ!

2008 மார்ச் 19: ராஜூவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி , நளினியை வேலூர் சிறையில் சந்தித்து பேசினார். 

2011 ஆகஸ்ட் 12: கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். தொடர்ந்து செப்டம்பர் மாதம் அவர்கள் தூக்கில் போடப்படலாம் என செய்திகள் வெளியாகின.

2011 ஆகஸ்ட் 26 :  11 ஆண்டுகளாக சிறையில் இருந்து துன்பத்தை அனுபவித்து வருவதாகவும், அதனால் தங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கூறி, மூவரும் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற  நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பின்னர் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. 

2014 பிப்ரவரி 18: கருணை மனுக்கள் எந்த காரணமுமின்றி நிலுவையில் இருந்த காரணத்தால், நால்வரின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்படுவதாக சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. 

2014 பிப்ரவரி 19: அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் படி ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்திருந்தால் மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென கூறப்படுவதால் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவதாகவும் மூன்று நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார். 

2014 பிப்ரவரி : தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியது. தொடர்ந்து 7  பேரையும் 3 நாட்களுக்குள் விடுவிக்க தடையும் பெறப்பட்டது. 

2014 ஏப்ரல் 25:  வழக்கில்  மத்திய மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. 

2015 டிசம்பர் 2:   மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. 

ஆனால், சட்டப்பிரிவு 161வது கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையென தெரிவித்து, இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் வழக்கைத் தீர்மானிக்க, மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

2016 மார்ச் 2: 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது தமிழக அரசு.

2018 செப்டம்பர் 6 : 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தில் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.

2018 செப்டம்பர் 9  : ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு பரிந்துரைந்தது. 

2019 ஜூலை 1 : ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி பரிந்துரைத்ததை ஆளுநருக்கு நினைவூட்ட நினைவூட்டல் கடிதம் அனுப்பவுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 

2019 மே 9:  7 பேர் விடுதலையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி- ஆளுநர் முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  

2020 ஜனவரி 14: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள பெரிய சதித்திட்டம் தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. 

2020 ஜனவரி 21 : குற்றவாளிகள் கருணை மனு மீதான தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் தெரிவிக்க உத்தரவிட்டது. தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனையடுத்து இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆளுநர் இந்த வாரத்தில் முடிவெடுப்பார் என மத்திய அரசு தெரிவித்தது. 

பிப். 2 2020 : கூட்டத்தொடரில் தொடக்க உரை ஆற்றிய ஆளுநர் உரையில் ஏழு பேர் குறித்து எந்தவித அறிவிப்பு வெளியாகவில்லை.

2021 மே 28:

சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக வருக்கு பரோல் வழங்க் அவரது தாய் அற்புதம்மாள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்டது. தொடர் சிகிச்சை காரணமாக, அவருக்கு 8 முறை பரோல் வழங்கப்பட்டது.   

ஜனவரி 20 ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. 

2022 பிப்ரவரி:  10 வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. 

2022 மார்ச் 9: தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. 32 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீன் கிடைத்துள்ளது. 

 

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Embed widget