மேலும் அறிய

Ops On DMK: திமுக செய்த 15 துரோகங்கள்! - பட்டியலை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம்

திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் என்ற போர்வையில்  மக்கள் அனுபவத்து வரும் வேதனைகள் எண்ணிலடங்கா என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் என்ற போர்வையில்  மக்கள் அனுபவத்து வரும் வேதனைகள் எண்ணிலடங்கா என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இரண்டாண்டு தி.மு.க. ஆட்சியின் வேதனைகள் என்ற தலைப்பில் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

”சாத்தியமற்ற வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்த தி.மு.க. ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக "திராவிட மாடல்" என்ற போர்வையில் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் எண்ணிலடங்கா! வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஒருபுறம் என்றால், வாக்குறுதிகளுக்கு முரணான செயல்பாடுகள் மறுபுறம். தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் படும் அல்லல்களில் முக்கியமானவற்றை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 'மாதம் ஒருமுறை மின் கட்டணம்' நடைமுறைப்படுத்தப்படும் என்பதும், ஆண்டொன்றுக்கு 6,000 ரூபாய் வரை மக்கள் மீதான சுமை குறையும் என்பதும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு
வந்த ஒரே ஆண்டில் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி 18,000 ரூபாய் வரை கூடுதல் சுமையை ஏற்படுத்தியது தி.மு.க. இது தி.மு.க. அரசின் முதல் துரோகம்.

கொரோனா நோய்த் தாக்கத்திலிருந்து மக்கள் மீளும் வரை சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியதோடு, ஆண்டுக்காண்டு சொத்து வரியை உயர்த்திக் கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தது தி.மு.க. இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் கூடுதல் சுமையை ஏற்படுத்தியது தி.மு.க. அரசு. இது தி.மு.க. அரசின் இரண்டாவது துரோகம்.

சொத்து வரியை தொடர்ந்து குடிநீர் வரி உயர்வு. இது மூன்றாவது துரோகம்.

ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும் என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி. ஆட்சிக்கு வந்தவுடன் இதை நிறைவேற்றிய தி.மு.க. அரசு, இதனை ஈடு செய்யும் வகையில், ஒரு சில மாதங்களிலேயே ஆரஞ்ச் பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் அளவுக்கு உயர்த்தியது. இதேபோன்று ஆவின் பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் வகைகள் போன்றவற்றின் விலையையும் உயர்த்தியுள்ளது. ஆவின் வெண்ணெய்க்கு இன்று மிகப் பெரிய தட்டுப்பாடு நிலவுகிறது. ஆவின் பொருட்கள் தாராளமாக கிடைப்பதில்லை. ஆவின் பால் விநியோகம் வெகுவாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. பாலுக்கான கொள்முதல் உயர்த்தப்படவில்லை. மொத்தத்தில் ஆவின் நிறுவனத்தின் கதி அதோகதி. இது தி.மு.க. அரசின் நான்காவது துரோகம்.

“நகைக் கடன் தள்ளுபடி' என்ற வாக்குறுதி தி.மு.க.வால் அளிக்கப்பட்டது. *நகைக் கடன் வாங்கிக் கொள்ளுங்கள், தள்ளுபடி செய்யப்படும்' என மேடைக்கு மேடை தி.மு.க.வினரால் பேசப்பட்டது. விண்ணப்பித்தவர்களின் 25 விழுக்காட்டினருக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

மீதமுள்ள 75 விழுக்காட்டு மக்கள் கடனாளியாக ஆனதுதான் மிச்சம். இது தி.மு.க. அரசின் ஐந்தாவது துரோகம்.

கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி தி.மு.க.வால் அளிக்கப்பட்டது.

இது பற்றிய பேச்சே இல்லை. இது தி.மு.க. அரசின் ஆறாவது துரோகம். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மேடைக்கு மேடை தி.மு.க.வினரால் முழங்கப்பட்டது. இந்த வாக்குறுதி கிணற்றில் போட்ட

கல்லாக மாறிவிட்டது. இது தி.மு.க.வின் ஏழாவது துரோகம்.

அரசு ஊழியர்களுக்கும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கும் பழைய ஒய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி தி.மு.க.வால் அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் ‘இது சாத்தியமில்லை' என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இது தி.மு.க.வின் எட்டாவது துரோகம்.

அரசு மருத்துவர்களுக்கான பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு குறித்து 2009 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை நடைமுறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி தி.மு.க.வால் அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டு இருக்கிறது. இதற்காக குரல் கொடுப்பவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தி.மு.க.வின் ஒன்பதாவது துரோகம்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும் என்ற வாக்குறுதி தி.மு.க.வால் அளிக்கப்பட்டது. இன்று வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது தி.மு.க.வின் பத்தாவது துரோகம்.

மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் என்று சொல்லிவிட்டு அதற்கு பல்வேறு நிபந்தனைகள். இது தி.மு.க.வின் பதினொன்றாவது துரோகம்.

நியாய விலைக் கடைகள் மூலம் கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு விநியோகம் என்ற வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தி.மு.க.வின் பன்னிரெண்டாவது துரோகம்.

நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாகவும், கரும்புக்கான ஆதார விலை 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது தி.மு.க.வின் பதிமூன்றாவது துரோகம்,

முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி குறித்து பேச்சுமூச்சே இல்லை. மாறாக, ஏற்கெனவே முதியோர் உதவித் தொகை பெற்று வந்த பல பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். இது தி.மு.க. அரசின் பதினான்காவது துரோகம்.

எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் மானியம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது தி.மு.க. அரசின் பதினைந்தாவது துரோகம்.

இப்படி அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு தி.மு.க. எண்ணற்ற துரோகங்களை தமிழ்நாட்டிற்கு இழைத்து இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

School Leave: விடாமல் பெய்யும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - எந்த மாவட்டம் தெரியுமா?
School Leave: விடாமல் பெய்யும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - எந்த மாவட்டம் தெரியுமா?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Rains: 29 மாவட்டங்கள்.. வெளுத்து வாங்கப்போகும் மழை - இதுதான் லிஸ்ட்!
TN Rains: 29 மாவட்டங்கள்.. வெளுத்து வாங்கப்போகும் மழை - இதுதான் லிஸ்ட்!
கரூரில் அழுததற்கு விமர்சனம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.. மனித உணர்வும் அறிவும் முக்கியம்!
கரூரில் அழுததற்கு விமர்சனம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.. மனித உணர்வும் அறிவும் முக்கியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் வரலாறு படைத்த சனே டகாய்ச்சி காத்திருக்கும் சவால்கள்..! | Japan New PM Sanae Takaichi
Selvaperunthagai Angry|அயோக்கிய பய..சாதி வெறிநான் தண்ணிய தொடக்கூடாதா?அதிகாரியை திட்டிய செ.பெருந்தகை
Vazhukku maram : கொட்டும் மழையில் சாகசம்வழுக்கு மரம் ஏறும் போட்டிமெய்சிலிர்க்க வைத்த வீரர்கள்
”சாதி இப்பவும் இருக்கு தான! மாரி செல்வராஜின் வலிகள்”துருவ் SUPPORT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Leave: விடாமல் பெய்யும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - எந்த மாவட்டம் தெரியுமா?
School Leave: விடாமல் பெய்யும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - எந்த மாவட்டம் தெரியுமா?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Rains: 29 மாவட்டங்கள்.. வெளுத்து வாங்கப்போகும் மழை - இதுதான் லிஸ்ட்!
TN Rains: 29 மாவட்டங்கள்.. வெளுத்து வாங்கப்போகும் மழை - இதுதான் லிஸ்ட்!
கரூரில் அழுததற்கு விமர்சனம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.. மனித உணர்வும் அறிவும் முக்கியம்!
கரூரில் அழுததற்கு விமர்சனம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.. மனித உணர்வும் அறிவும் முக்கியம்!
கழிப்பறை வசதி ; பயணியிடம் தனியார் பேருந்து மோசடி ! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
கழிப்பறை வசதி ; பயணியிடம் தனியார் பேருந்து மோசடி ! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
கோவை & திருப்பூர்: நாளை மின் தடை! உங்கள் பகுதிகளில் மின்சாரம் இருக்குமா? முக்கிய அறிவிப்பு!
கோவை & திருப்பூர்: நாளை மின் தடை! உங்கள் பகுதிகளில் மின்சாரம் இருக்குமா? முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: எல்லோரும் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
TNPSC Group 4: எல்லோரும் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Bigg Boss Tamil 9: கானா வினோத் முகத்தில் உதைக்கப்போன ஆதிரை! பிக்பாஸில் பரபரப்பு!
Bigg Boss Tamil 9: கானா வினோத் முகத்தில் உதைக்கப்போன ஆதிரை! பிக்பாஸில் பரபரப்பு!
Embed widget