மேலும் அறிய

NLC Protest: பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த 37 பாமகவினர் கைது - கடலூர் காவல்துறை ரிப்போர்ட்

என்எல்சி நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 37 பாமகவினரை கடலூர் காவல்துறை கைது செய்துள்ளதாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

என்எல்சி நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 37 பாமகவினரை கடலூர் காவல்துறை கைது செய்துள்ளதாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

அந்த செய்திக் குறிப்பில், “அரசுத்துறை நிறுவனமான என்எல்சி (NLC) 15 ஆண்டுகளுக்கு முன்பு இழப்பீடு வழங்கி நிலங்களை கையகபடுத்திய நிலங்களில் பரவலாறு கால்வாய் மாற்றுபாதை திட்டத்தின் மூலம் வெட்டும் பணியை மேற்கொண்டனர். இதனை அடுத்து பா.ம.க கட்சியினர் சாலை மறியல், சாலைகளில் டயர் எரிப்பு, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  NLC நிறுவனத்தை வெளியேறுமாறு முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். இதற்கு போலீஸ் அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், 28.7.2023 ஆம் தேதி 12 மணிக்கு பாமகவினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திரண்டு வந்து ஆர்ப்பாட்டமும், கண்டனம் கோஷங்களும் முழங்கினர். முடிவில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட NLC ஆர்ச் கேட்டில் நுழைய முயற்சி செய்தபோது தடுத்து நிறுத்திய போலீசார் மீது பாமக தரப்பினர் தண்ணீர் பாட்டில் வீசியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். 


கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தண்ணீர் பீச்சியும், கண்ணீர் புகை வீசியும் கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதி சூழ்நிலைக்கு கொண்டுவந்து, சட்டம் ஒழுங்கை பாதுகாத்தனர். பின்பு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக கட்சியினர் 197 நபர்களை தடுப்பு நடவடிக்கையாக கைது செய்து, வடகுத்து KNT மஹாலில் வைக்கப்பட்டு, பின்னர் மாலை விடுவிக்கப்பட்டார்கள்.


அதேபோல் வடக்கு மண்டலத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைகளில் சுமார் 90 சாலை மறியல் போராட்டங்கள் நடத்த முற்பட்ட சுமார் 2000 பாமகவினரை தடுப்பு நடவடிக்கையாக கைது செய்து பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்து. மேலும், மேற்படி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நெய்வேலி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் உள்ளிட்ட 26 நபர்களை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுள்ளனர்.


சட்டத்துக்கு முரண்பட்ட இரண்டு இளம்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பாமக தலைவர் கைதை தொடர்ந்து 4 இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. மேலும் கடந்த 26.7.2023 மற்றும் 28.7.2023 தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல்வீச்சு வழக்குளில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்”  என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக பணியை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனால் நிலங்களை கையகப்படுத்தும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.  சோத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டது.  பயிர் செய்யப்பட்ட வயல்களில்  இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   தற்போது அங்கு நெற்பயிற்கள் அறுவடைக்கு கூட தயார் ஆகாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பாமகவினர் போராட்டம் நடத்தினர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
IND vs ENG 2nd Test: ஏளனமாக பேசிய ஸ்டோக்ஸ்... ஆணவத்தை அடக்கிய இந்தியா - சொன்னது ஞாபகம் இருக்கா?
IND vs ENG 2nd Test: ஏளனமாக பேசிய ஸ்டோக்ஸ்... ஆணவத்தை அடக்கிய இந்தியா - சொன்னது ஞாபகம் இருக்கா?
IND China: ரஃபேல் விவகாராத்தில் சீனாவின் குட்டு, இந்தியாவிற்கு எதிராக பிளான்? போட்டுக் கொடுத்த ஃப்ரான்ஸ்
IND China: ரஃபேல் விவகாராத்தில் சீனாவின் குட்டு, இந்தியாவிற்கு எதிராக பிளான்? போட்டுக் கொடுத்த ஃப்ரான்ஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
IND vs ENG 2nd Test: ஏளனமாக பேசிய ஸ்டோக்ஸ்... ஆணவத்தை அடக்கிய இந்தியா - சொன்னது ஞாபகம் இருக்கா?
IND vs ENG 2nd Test: ஏளனமாக பேசிய ஸ்டோக்ஸ்... ஆணவத்தை அடக்கிய இந்தியா - சொன்னது ஞாபகம் இருக்கா?
IND China: ரஃபேல் விவகாராத்தில் சீனாவின் குட்டு, இந்தியாவிற்கு எதிராக பிளான்? போட்டுக் கொடுத்த ஃப்ரான்ஸ்
IND China: ரஃபேல் விவகாராத்தில் சீனாவின் குட்டு, இந்தியாவிற்கு எதிராக பிளான்? போட்டுக் கொடுத்த ஃப்ரான்ஸ்
Vallakottai murugan temple: 17 ஆண்டுகளுக்குப் பிறகு! வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகம்!
Vallakottai murugan temple: 17 ஆண்டுகளுக்குப் பிறகு! வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகம்!
IND Vs Eng 2nd Test: ஒரே வின்னு தான்.. மொத்த சாதனைகளையும் அள்ளிப்போட்டாச்சு, ஆசியாவின் முதல் அணியாமே..
IND Vs Eng 2nd Test: ஒரே வின்னு தான்.. மொத்த சாதனைகளையும் அள்ளிப்போட்டாச்சு, ஆசியாவின் முதல் அணியாமே..
Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா
Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
Embed widget