மேலும் அறிய

Ayudha Pooja 2024: சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து ஆயுத பூஜை கொண்டாட்டம்

ஆயுத பூஜை முன்னிட்டு சேலம் கடை வீதி, முதல் மற்றும் இரண்டாம், அக்ரஹாரம், செவ்வாய்பேட்டை, லீ பஜார் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது தொழில் செய்யும் கருவிகளை கொண்டு பூஜையிட்டு வழிபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தும் ஆயுதங்களை சுத்தம் செய்து ஆயுத பூஜையை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை கழுவி சுத்தம் செய்து, ஆட்டோக்களுக்கு பட்டையிட்டு ஆயுத பூஜையை கொண்டாடினர்.

இந்த ஆயுத பூஜை விழாவில் அனைத்து மதத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஒன்றிணைந்து ஆயுத பூஜையைக் கொண்டாடினர். 

Ayudha Pooja 2024: சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து ஆயுத பூஜை கொண்டாட்டம்

இதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆயுத பூஜை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது கடைகள், அலுவலகங்களுக்கு மற்றும் வாகனங்களை சுத்தப்படுத்தி அதன்பின் ஆயுத பூஜையை கொண்டாடினர். ஆயுத பூஜை முன்னிட்டு சேலம் கடை வீதி, முதல் மற்றும் இரண்டாம், அக்ரஹாரம், செவ்வாய்பேட்டை, லீ பஜார், நான்கு ரோடு, ஐந்து ரோடு போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது தொழில் செய்யும் கருவிகளை கொண்டு பூஜையிட்டு வழிபட்டனர்.

இதேபோன்று, ஆயுத பூஜையையொட்டி சேலம் பூ மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. பண்டிகை காலம் என்பதால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.

பெரும்பாலானோர் பூஜைக்குத் தேவையான பூக்களை முன்னதாகவே வாங்கிச் சென்றனர். இருப்பினும் சேலம் பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குண்டுமல்லி ஒரு கிலோ 500 ரூபாயக்கு விற்கப்பட்ட நிலையில் பண்டிகை அன்று ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. முல்லை 400 முதல் 500 ரூபாய்க்கும் விற்பனையானது. 

Ayudha Pooja 2024: சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து ஆயுத பூஜை கொண்டாட்டம்

சேலம் கடை வீதியில் பொரி, பழங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொரி மற்றும் பழங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டாலும், விலை கடந்த ஆண்டு விட அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் குறைந்த அளவு பொருட்களை மட்டுமே வாங்கிச் சென்றனர் என வியாபாரிகள் கூறினர். பழங்களைப் பொறுத்தவரை ஆப்பிள் ஒரு கிலோ 80 முதல் 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி கிலோ 70 ரூபாய்க்கும், கொய்யா ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், திராட்சை ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வாழைக் கன்றுகள் ஜோடி 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்பட்டது.

பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் கடைகளை ஜிகினா பேப்பர் என்று சொல்லக்கூடிய வண்ண பேப்பர்களை கொண்டு அலங்காரம் செய்தனர். கூட்ட நெரிசல் அதிகம் உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஆயுத பூஜை பண்டிகைக்காக சேலம் சின்ன கடை வீதி, செவ்வாய்பேட்டை மற்றும் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருக்கும் மண்டிகளுக்கு சாம்பல் பூசணி அதிக அளவு வரவழைக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலத்திலிருந்து லாரி லாரியாக சாம்பல் பூசணியை வியாபாரிகள் வரவழைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆந்திராவைத் தவிர அரியலூர், அரூர், கரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் சாம்பல் பூசணி வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ஒரு கிலோ சாம்பல் பூசணி ரூபாய் 20க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கிலோ ரூபாய் 30க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வரத்து அதிகரித்து இருந்தாலும், விலை சற்று அதிகரித்துள்ளதாகவும், ஆயுத பூஜை பண்டிகைக்காக சுமார் 100 டன் சாம்பல் பூசணி வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் சேலம் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"புத்தர் பிறந்த இடத்தில் இருந்து வருகிறேன்" தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கம்.. Nihon Hidankyo-க்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கம்.. Nihon Hidankyo-க்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
Tata Trusts Chairman: டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம் - யார் இந்த நோயல்?
Tata Trusts Chairman: டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம் - யார் இந்த நோயல்?
Breaking News LIVE 11 OCT 2024: அக்டோபர் 15-ஆம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்..
Breaking News LIVE 11 OCT 2024: அக்டோபர் 15-ஆம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MP Ravikumar slams PM Modi |உ.பி-க்கு 34000 கோடி,நமக்கு வெறும் 7000 கோடியா?மோடியை விளாசும் I.N.D.I.ABengaluru Pigeon Thief | புறாவை வைத்து 30 லட்சத்தை சுருட்டிய திருடன்! பெங்களூரை அலறவிட்ட கேடி!TVK Vijay vs BJP | பாஜகவிடம் பணிந்த விஜய்? ஆயுத பூஜைக்கு வாழ்த்து! காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"புத்தர் பிறந்த இடத்தில் இருந்து வருகிறேன்" தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கம்.. Nihon Hidankyo-க்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கம்.. Nihon Hidankyo-க்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
Tata Trusts Chairman: டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம் - யார் இந்த நோயல்?
Tata Trusts Chairman: டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம் - யார் இந்த நோயல்?
Breaking News LIVE 11 OCT 2024: அக்டோபர் 15-ஆம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்..
Breaking News LIVE 11 OCT 2024: அக்டோபர் 15-ஆம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்..
Eng Vs Pak Test: நொந்துபோன பாகிஸ்தான் ரசிகர்கள்,  பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி
Eng Vs Pak Test: நொந்துபோன பாகிஸ்தான் ரசிகர்கள், பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி
Nandhan OTT Release : வேட்டையன் போகாதவங்க இந்த படத்த பாருங்க...ஓடிடியில் வெளியானது சசிகுமாரின்  நந்தன்
Nandhan OTT Release : வேட்டையன் போகாதவங்க இந்த படத்த பாருங்க...ஓடிடியில் வெளியானது சசிகுமாரின் நந்தன்
Madurai: முதலமைச்சர் கோப்பை இறுதிப்போட்டி நடுவே இரு அணிகள் மோதலால் பரபரப்பு
முதலமைச்சர் கோப்பை இறுதிப்போட்டி நடுவே இரு அணிகள் மோதலால் பரபரப்பு
Lebanon: லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் - 22 பேர் பலி, 117 பேர் காயம்
Lebanon: லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் - 22 பேர் பலி, 117 பேர் காயம்
Embed widget