மேலும் அறிய

அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க அமைச்சர் பொன்முடி தரப்பு வழக்கறிஞர் காலஅவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகின்ற 17-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செயல்பட்ட செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் எம்பியுமான பொன்.கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு சாட்சிகள் விசாரணை கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இதுவரை 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில் ஓய்வுபெற்ற தாசில்தார் குமாரபாலன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன், பூத்துறை கிராம உதவியாளர் ரமேஷ், முன்னாள் கிராம உதவியாளர் கோபாலகண்ணன், நில அளவைத்துறை முன்னாள் துணை ஆய்வாளர் நாராயணன், கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குனர் சுந்தரம், ஓய்வுபெற்ற தாசில்தார் மாணிக்கம், ஓய்வுபெற்ற நில அளவையர் அண்ணாமலை,  பாஸ்கர்  ஆகிய 9 பேர், இவ்வழக்கு சம்பந்தமான கோப்புகளில் தங்களிடம் அப்போதிருந்த உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும், தங்களுக்கு இந்த முறைகேடு பற்றி எதுவும் தெரியாது என்றுகூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 5 பேர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி. ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள், அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்து வருவதால் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி, மனுதாக்கல் செய்தார்.

அம்மனு ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அம்மனு மீதான விசாரணையும் நடைபெற்றது.  அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பு வழக்க்றிஞர் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க ஏதுவாக மனுதாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கும்படி கேட்டனர். இதை ஏற்ற மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Delimitation Bill: தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிடும் வரை தொடர் போராட்டம்; திருமா எச்சரிக்கை
Delimitation Bill: தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிடும் வரை தொடர் போராட்டம்; திருமா எச்சரிக்கை
டாஸ்மாக் பணமா? தேர்தல் பணமா? ரூ. 12.42 லட்சம் சிக்கியதால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு !
டாஸ்மாக் பணமா? தேர்தல் பணமா? ரூ. 12.42 லட்சம் சிக்கியதால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு !
கோடை வெப்பத்திற்கு குட்-பை! - அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோடை வெப்பத்திற்கு குட்-பை! - அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Premalatha:
Premalatha: "பெண்களுக்கு ஒன்று என்றால் அண்ணனிடம் உரிமையாக பேசுவேன்..." பிரேமலதா விஜயகாந்த்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓட்டு போட ரெடியா.! இவிஎம் மிஷினில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
ஓட்டு போட ரெடியா.! இவிஎம் மிஷினில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
Gajakesari Raja Yogam: அடிக்கப்போது கஜகேசரி ராஜயோகம்! அடுத்த வாரம் வாழ்க்கை மாறப்போகும் ராசிக்காரர்கள் யார்?
Gajakesari Raja Yogam: அடிக்கப்போது கஜகேசரி ராஜயோகம்! அடுத்த வாரம் வாழ்க்கை மாறப்போகும் ராசிக்காரர்கள் யார்?
US Iran War: ஈரானிடம் தர்ம அடி வாங்கும் அமெரிக்கா; வீழ்ந்த MQ-4C டிரைட்டன் ட்ரோன்; விலை இத்தனை ஆயிரம் கோடியா.!
ஈரானிடம் தர்ம அடி வாங்கும் அமெரிக்கா; வீழ்ந்த MQ-4C டிரைட்டன் ட்ரோன்; விலை இத்தனை ஆயிரம் கோடியா.!
CSK Khaleel Ahmed: நல்லாதானே போய்ட்டு இருந்துச்சு..! காயம் காரணமாக விலகிய அடுத்த வேகப்பந்து வீச்சாளர்
CSK Khaleel Ahmed: நல்லாதானே போய்ட்டு இருந்துச்சு..! காயம் காரணமாக விலகிய அடுத்த வேகப்பந்து வீச்சாளர்
Trump Vs Jinping: ''ஈரானுக்கு ஆயுதம் வழங்க மாட்டோம் என சீனா உறுதி.!'' ட்ரம்ப் சார், நீங்க சொல்றது உண்மையா, உடான்ஸா.?
''ஈரானுக்கு ஆயுதம் வழங்க மாட்டோம் என சீனா உறுதி.!'' ட்ரம்ப் சார், நீங்க சொல்றது உண்மையா, உடான்ஸா.?
Premalatha:
Premalatha: "பெண்களுக்கு ஒன்று என்றால் அண்ணனிடம் உரிமையாக பேசுவேன்..." பிரேமலதா விஜயகாந்த்
Bajaj WEGO Electric: அடிக்குற வெயிலுக்கு EV ஆட்டோ வாங்கிடலாம் போலயே.! 296 கிமீ ரேஞ்சுடன் பஜாஜ் ‘வீகோ‘; விலை என்ன.?
அடிக்குற வெயிலுக்கு EV ஆட்டோ வாங்கிடலாம் போலயே.! 296 கிமீ ரேஞ்சுடன் பஜாஜ் ‘வீகோ‘; விலை என்ன.?
Maruti Ignis: விற்பனையும் இல்லை, டிமேண்டும் இல்லை..! குட்டிக் காரை சைலண்டாக ஓரங்கட்டிய மாருதி சுசூகி
Maruti Ignis: விற்பனையும் இல்லை, டிமேண்டும் இல்லை..! குட்டிக் காரை சைலண்டாக ஓரங்கட்டிய மாருதி சுசூகி
Embed widget