மேலும் அறிய

’உயர்கல்வி குறித்த முடிவில் மாணவர்களை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது’ - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

உயர்கல்வி படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் மாணவர்களின் விருப்பத்தை பெற்றோர்கள் நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரியுள்ளார்.

தருமபுரியில் தமிழ்நாடு அரசு சார்பில் ’நான் முதல்வன் - கல்லூரிக் கனவு’ என்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டு கையேட்டினை வழங்கினார்.

தொடர்ந்து இந்த விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியவை பின்வருமாறு:

”மாணவர்களின் உயர்கல்வியில் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ’நான் முதல்வன் கல்லூரி கனவு’ என்னும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக அமையும், நல்ல வாய்ப்பாகவும் அமையும்.

முதலமைச்சரின் நோக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களின் எதிர்காலத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு அவர்கள் அனைத்து துறையிலும் மாணவர்கள் முதல்வனாகத் திகழ வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டுள்ளார்.


’உயர்கல்வி குறித்த முடிவில் மாணவர்களை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது’ - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கல்வியில் முதல்வன், அறிவாற்றலில் முதல்வன், படைப்புத்திறனில் முதல்வன் என சமத்துவமாக மற்றவர்கள் மதிக்கத்தக்க வகையில் மாணவர்கள் விளங்க வேண்டும். குறிப்பாக அனைவரும் பின்பற்றும் பண்பைக் கொண்ட மாணவனாக விளங்க வேண்டும்.

அனைவரையும் வழிநடத்தும் தலைமைத் திறன் கொண்டவராக மாணவர்கள் உயர வேண்டும். இதுபோன்ற உன்னத நோக்கங்களைக் கொண்டு நான் முதல்வன் என்ற தலைப்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பெற்றோர் மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது

இந்த உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வியைப் பெற வேண்டும். தருமபுரி மாவட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரில் இருந்தாலும், இந்த மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல்துறை பணி உள்ளிட்ட உயர் பணிகளில் பலர் சென்றுள்ளனர்.

மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த நிகழ்ச்சியில் எட்டு தலைப்புகளில் சிறந்த பேராசிரியர்கள் உயர் கல்வி வாய்ப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர். அனைத்து மாணவ மாணவிகளும் இந்நிகழ்ச்சியை பயன்படுத்தி எதிர்காலத்தில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் முதல்வனாக வர வேண்டும்.


’உயர்கல்வி குறித்த முடிவில் மாணவர்களை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது’ - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

உயர்கல்வியில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வது சிறந்தது. கட்டாயப்படுத்தி மாணவர்களின் விருப்பமின்றி உயர்கல்வியில் அவர்களை சேர்ப்பது சரியாக அமையாது” என்றார்.

செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

மேலும் இந்த நிகழ்ச்சியில் செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் கலந்து கொண்டதால், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை செவித்திறன் குறைபாடுடையவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், ஆசிரியர் ஒருவரை வைத்து மொழிப்பெயர்ப்பும் (சைகை மூலம்) செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget