மேலும் அறிய

முதல்வர்  மனுநீதி சோழன் போல் மக்களின் தேவையை உடனடியாக தீர்வு காண்கிறார் - அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” என்ற முகாமில்  முதல்வர்  மனுநீதி சோழன் போல் பொதுமக்களின் தேவையை உடனடியாக தீர்வு காண்கிறார் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

“மக்களுடன் முதல்வர்” முகாமினை  பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு  துவக்கி வைத்தார். திருவண்ணாமலை நகராட்சி சன்னதி தெரு செவ்வா மடத்தில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று “மக்களுடன் முதல்வர்” முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.  

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிமையாகவும் சென்று சேர்த்திட வழிவகுக்கும் “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்  கோயம்புத்தூர் எஸ்.என்.ஆர் கல்லூரியில் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற உடன் மக்களின் மனநிலை அறிந்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக அரசின் அனைத்து துறைகளின் சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும் வகையில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

 


முதல்வர்  மனுநீதி சோழன் போல் மக்களின் தேவையை உடனடியாக தீர்வு காண்கிறார் -  அமைச்சர் எ.வ.வேலு

 

நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகள் முதற்கட்டமாக இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவண்ணாமலையில் உங்கள் தொகுதியில்  ஸ்டாலின்  திட்டத்தை துவக்கி வைத்தார். பின்பு ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதல் கையெழுத்தாக மக்களின் பிரச்சனைகளை 100 நாட்களில் தீர்க்கும் வகையில் தனித்துறையை உருவாக்கி முதல்வரின் முகவரி என்ற இணையதளத்தை உருவாக்கினார். அத்துறையை துவக்கிய உடன் 26 இலட்சத்திற்கு மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வந்தது. பொதுமக்களிடம் இருந்து வந்த மனுக்கள் அடிப்படையில் இல்லம் தேடி கல்வி நான் முதல்வன் இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 திட்டம் புதுமைப் பெண் காலை உணவு திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத்திட்டம் துவக்கப்பட்டது. கடந்த (14.12.2023)-ஆம் தேதி இத்திட்டம் துவக்கி வைக்க ஆணை பிறப்பித்தார் . இப்போது உடனடியாக இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த காலங்களில் யாராக இருந்தாலும் முதலமைச்சர் தேடி சென்று மனு அளிப்பது தான் வழக்கம். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர்  ஆட்சி பொறுப்பேற்ற உடன் தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக நேரடியாக களத்திற்கே சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகளை நேரடியாக அழைத்து ஆய்வு செய்து இருக்கிறார்.

 


முதல்வர்  மனுநீதி சோழன் போல் மக்களின் தேவையை உடனடியாக தீர்வு காண்கிறார் -  அமைச்சர் எ.வ.வேலு

 

நமது முதல்வர்  மக்களுக்கு இருக்குமிடம் தேடி அரசு துறை அதிகாரிகள் சேவைகளை வழங்க வேண்டும் என்று இத்திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார். கூட்டுறவு சங்கங்களில் வாங்கும் பொருட்களில் ஏதாவது குறை இருந்தால் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நிலச்சீர்திருத்தம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். திருவண்ணாமலையில் 2006 – 2011 காலகட்டங்களில் பட்டா கொடுப்பதில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு முதலமைச்சர் கூறி 10 வருடம் வசிக்கின்றவர்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும் என முடிவு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்றேன். அதன் விளைவாக முதலமைச்சர் அப்போது ஆணையிட்டார்கள். மத்தளங்குளம் மற்றும் தேனிமலை நான் வசித்த பாலாஜி நகரில் காலம் காலமாக கட்டியிருந்தார்கள். பட்டா கிடைக்கவில்லை. கலைஞர் அவர்களிடத்தில் கூறி திருவண்ணாமலையில் 10000 பேருக்கு பட்டா வழங்கினேன். இப்பொழுது நகர எல்லையிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பட்டா கொடுக்க கூடாது என்று அணையுள்ளது. இதை நமது தமிழ் நாடு முதலமைச்சர்  கவனத்திற்கு எடுத்து சென்றுயுள்ளேன். 2006 –2011 வரை தமிழ்நாட்டிலே அதிக அளவில் திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு பட்டா கொடுத்துள்ளேன்.

 

 


முதல்வர்  மனுநீதி சோழன் போல் மக்களின் தேவையை உடனடியாக தீர்வு காண்கிறார் -  அமைச்சர் எ.வ.வேலு


நீதி தவறாத மாமன்னன் மனுநீதி சோழன் என்ற புத்தகத்தை படித்து இருக்கிறேன். மன்னனை பார்க்க வேண்டுமென்றால் பொதுமக்கள் பல சிரமங்களை தாண்டி வர வேண்டும் என்று நினைத்து மனுநீதி சோழன் தனது அரண்மனைக்கு வெளியிலே மணி ஒன்றை கட்டி வைத்தார். பொதுமக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அந்த மணியை அடிப்பார்கள். உடனே மன்னன் வெளியே வந்து அந்த பிரச்சனையை பொதுமக்களுக்கு தீர்த்து வைப்பார். அது போல நமது முதல்வர்  மனுநீதி சோழன் போல் பொதுமக்களின் தேவையை உடனடியாக தீர்வு காண்கிறார். இன்று கோவையில் மக்களை தேடி மனுக்களை பெறுகிறார். தற்போது நமது முதல்வர் மன்னன் மனுநீதி சோழன் போன்று தெரிகிறார். நமது மாவட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டம். விவசாயிகளை அதிகமாக கொண்டுள்ள மாவட்டம். ஆகையால் இந்த மாவட்டம் வளர்ச்சி அடைய வேண்டுமெனில் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

 


முதல்வர்  மனுநீதி சோழன் போல் மக்களின் தேவையை உடனடியாக தீர்வு காண்கிறார் -  அமைச்சர் எ.வ.வேலு

நமது திருவண்ணாமலை கோயில் உலக புகழ்ப்பெற்ற கோயில். அக்கோயில் வளர்ச்சி அடைந்தால் நாமும் வளர்ச்சி அடைவோம். ஆதற்காக தான் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். இந்த மாவட்டத்தில் நடுத்தர மக்கள் தான் அதிகமாக உள்ளனர். இன்று திருவண்ணாமலை நகராட்சியில் 6 வார்டுகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. (19.12.2023, 21.12.2023, 22.12.2023, 27.12.2023, 28.12.2023, 02.01.2024, 03.01.2024) ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை நகராட்;சியில் மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மனு வாங்கிய 30 நாட்களில் தீர்வு காண வேண்டும். அது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என அமைச்சர் தெரிவித்தார்.

“மக்களுடன் முதல்வர்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு இன்று காலையில் பெற்ற மனுக்களின் உடனடி தீர்வாக 15 நபர்களுக்கு ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்  மந்தாகினி கலந்து கொண்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
Mumbai Bill Board Accident: மும்பையில் புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
மும்பையில் புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
Mumbai Bill Board Accident: மும்பையில் புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
மும்பையில் புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
ஆசைக்காட்டி ரூ.4.13 லட்சம் மோசடி: தட்டித் தூக்கிய சைபர் க்ரைம் போலீசார்! எப்படி?
ஆசைக்காட்டி ரூ.4.13 லட்சம் மோசடி: தட்டித் தூக்கிய சைபர் க்ரைம் போலீசார்! எப்படி?
Sushil Kumar Modi: பாஜகவிற்கு பேரிழப்பு..! பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி காலமானார்..
Sushil Kumar Modi: பாஜகவிற்கு பேரிழப்பு..! பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி காலமானார்..
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Embed widget