மேலும் அறிய

'டிட்வா' புயல் எச்சரிக்கை: காரைக்காலில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!

காரைக்கால் மாவட்டத்தில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கைகள் விடுத்துள்ளதால் அமைச்சர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெற்றுள்ளது.

காரைக்கால்: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதியில் உருவாகியுள்ள 'டிட்வா' புயலின் காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் மிக கனமழை மற்றும் அதி தீவிர மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடுத்துள்ளது.

இந்த தீவிரப் பேரிடரை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம், இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் தலைமை வகித்தார். சார்பு ஆட்சியர் பூஜா, முன்னிலை வகித்து அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

உயர் அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

சார்பு ஆட்சியரின் அறிவுறுத்தல்கள்

சார்பு ஆட்சியர் பூஜா அனைத்துத் துறை அதிகாரிகளும் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

* மின் விநியோகம்: புயல் கரையைக் கடக்கும்போது மின்சார விநியோகத்தை உடனடியாகத் துண்டிக்க வேண்டும்.

* நீர் மேலாண்மை: அதிக மழை பெய்யும் பட்சத்தில், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றுவதற்குத் தேவையான மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைக்க பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சுகாதாரம்: சுகாதாரத்துறை, அவசர சிகிச்சை அளிப்பதற்கும், மழைக்குப் பின் ஏற்படும் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* அவசர மீட்பு: மரம் சாய்ந்து விழுந்தால், உடனடியாக அப்புறப்படுத்த தீயணைப்புத் துறை ஆயத்தமாக இருக்க வேண்டும்.

*மீனவர் பாதுகாப்பு: மீன்வளத்துறை, மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருப்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

*தகவல் தொடர்பு: பொதுமக்களிடையே பொய்யான செய்திகள் பரவாமல் இருக்கவும், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் உடனுக்குடன் அவர்களைச் சென்றடையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் காலத்தில் அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அமைச்சரின் உத்தரவுகள்

அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன், மீன்வளத்துறை அதிகாரிகள் கிராம வாரியாக மீனவர்கள் அனைவரும் கரைக்குத் திரும்பி விட்டார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

*பள்ளம் நீக்குதல்: மழைக்காலங்களில் வழக்கமாக மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்காணித்து, உடனடியாக மோட்டார் மூலம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

*நிவாரண முகாம்கள்: பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்குத் தேவையான அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு பள்ளிக்கூடங்கள் போன்ற நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

*கட்டுப்பாட்டறை: மாவட்ட கட்டுப்பாட்டறை 24 மணி நேரமும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்.

* முழு ஆயத்தம்: அனைத்துத் துறைகளும் எந்த நேரத்திலும் பேரிடரைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பொதுமக்கள் கவனத்திற்கு:

காரைக்காலில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண்கள் 1070 மற்றும் 1077 வழியாகப் புகார் தெரிவிக்கலாம்.

இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் நிர்வாகம் செந்தில்நாதன், துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணன், காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ், வடக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முருகையன் உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும், அலுவலர்களும் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
Embed widget