மேலும் அறிய

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதல் தொகுதியில் அவலம்; 40 ஆண்டுகளாக காத்திருக்கும் பொதுமக்கள்..!

குளித்தலை பேரூராட்சியாக இருந்த நகராட்சியாக தரம் உயர்வு பெற்று 25 ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளாக பஸ் நிலையம் இல்லாமல் வாடகை இடத்தில் தான் தற்காலிகமாக பஸ் நிலையம் இயங்கி வருகிறது.

குளித்தலை பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்வு பெற்று 25 ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளாக பஸ் நிலையம் இல்லாமல் வாடகை இடத்தில் தான் தற்காலிகமாக பஸ் நிலையம் இயங்கி வருகிறது. பேரால் அம்மன் கோயிலுக்கு சொந்தமான 1.22 ஏக்கர் நிலத்தில் இயங்கி வருவதால் வாடகை நகராட்சி கொடுத்து வருகிறது. பேரூராட்சிகள் இருக்கும் போது வாடகை வந்த இந்த பஸ் நிலையம் 40 ஆண்டுகளாக எந்த வசதியும் இன்றி இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2019-20 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குளித்தலை,


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதல் தொகுதியில் அவலம்;  40 ஆண்டுகளாக காத்திருக்கும் பொதுமக்கள்..!

 

கடம்பவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுங்ககேட் ரவுண்டானா மேற்கு பகுதியில் உள்ள 4.75 ஏக்கர் நிலத்தை புதிய பஸ் நிலையம் அமைக்க நகராட்சி சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை நகராட்சிக்கு விற்பனை செய்யக்கூடாது என்று பக்தர்கள் சிலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றனர். அது இன்று வரை நிலுவையில் உள்ளது. அதனால், புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், இப்போது திமுக அரசு அதில் தற்காலிக பஸ் நிலையத்தை ஆவது விரிவாக்கம் செய்யலாம் என்று நினைத்து  ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டதாக குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக குளித்தலை நகராட்சி நிர்வாகம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள தற்காலிக நிலையத்தின் வாடகை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தது. கோயில் அதிகாரிகள் பலமுறை நகராட்சி அலுவலகத்திலிருந்து நடந்து சென்று வாடகைக் கட்டணம் செலுத்தாததால் அறநிலையத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருவதாக குளித்தலை நகராட்சி ஆணையர் கூறினார். மேலும்,  ரூபாய் 20 லட்சம் நகராட்சி நிர்வாகம் கோயிலுக்கு செலுத்தியுள்ளதாக ஆணையர் கூறினார் .


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதல் தொகுதியில் அவலம்;  40 ஆண்டுகளாக காத்திருக்கும் பொதுமக்கள்..!

 

கடந்த ஜூன் 1ஆம் தேதி மீண்டும் திருப்பூர் அறநிலையத்துறை நீதிமன்றத்தில் நகராட்சி ஆணையர் ஆஜராக உள்ளார். இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு உண்டான இடமும் வழக்கில் உள்ளதால் விரிவாக்க பணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், விரிவாக்கத்திற்கு தேவையான கூடுதல் இடத்தையும் நகராட்சி கோயில் நிர்வாகம் எப்படி வழங்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, தமிழக அரசு ஆணை வெளியிட்டாலும் குளித்தலை நகராட்சி தற்காலிக பஸ் நிலையம் விரிவாக்கப் பணி நடக்குமா என்று தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் குளித்தலையில் நல்ல ஒரு பஸ் நிலையம் அமையுமா என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கலைஞர் முதல் தொகுதியில் அவலம் ஏற்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள் முதலமைச்சர் கண் திறப்பாரா என்று ஏக்கத்துடன் கூறினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget