மேலும் அறிய

Chennai Rain Mobile Signal: சென்னையில் கொட்டிய பெருமழை... முடங்கிய செல்போன் சிக்னல் - தவிக்கும் பொதுமக்கள்

Chennai Rain Mobile Signal: சென்னையில் பெய்த கனமழையால் செல்போன் சிக்னல் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Chennai Rain Mobile Signal: சென்னையில் பெய்த கனமழையால் முடங்கிய தொலை தொடர்பு சேவை தற்போது வரை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

கொட்டி தீர்த்த கனமழை:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மீட்பு பணிகள் முற்றிலும் சீரடைந்து பிறகு படிப்படியாக மின்சார விநியோகம் தொடங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடங்கியது தொலைதொடர்பு சேவை:

மின்சார விநியோகம் இன்னும் பல இடங்களில் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தான், நேற்று இரவில் இருந்தே பல இடங்களில் செல்போன் சிக்னல் முடங்கியது. ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் போன்ற பல தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவை முடங்கியது. இதனால், குடும்பத்தினரையோ, உறவினரையோ தொடர்புகொள்ள முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் வைஃபை வசதியும் முடங்கியுள்ளது. இதனால், புயல்  பாதிப்புகள் தொடர்பான செய்திகளை கூட தெரிந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.

தொலைதொடர்பு சேவை முடங்க காரணம் என்ன?

தொலைதொடர்பு சேவை முடங்க பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. நேற்று தொடர்மழையோடு பல இடங்களில் பலத்த காற்றும் வீசியது. இதனால், சில டவர்கள் சேதமடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது ஒரு காரணமாக கருதப்படுகிறது. பல டவர்களில் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர்களின் எரிபொருள் தீர்ந்துவிட்டதாலும், அதனை மீண்டும் நிரப்ப முடியாத சூழலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதுபோன்ற பல காரணங்களால் தான் தொலை தொடர்பு சேவை முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மழைநீர் வடிந்தால் தான் தொலை தொடர்பு சேவையிலும் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
Uttarakhand Accident:  ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு
Uttarakhand Accident:  ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையில் கவிழ்ந்த வேன்.. இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
Breaking News LIVE: கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது
”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக யுவ புரஸ்கார் விருது..  தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமனுக்கு அறிவிப்பு!
”விஷ்ணு வந்தார்” புத்தகத்திற்காக யுவ புரஸ்கார் விருது.. தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமனுக்கு அறிவிப்பு!
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட்  தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
Central Budget FY25: ஜுலை 22ம் தேதி மத்திய அரசின் விரிவான பட்ஜெட் தாக்கல் - தகவலும், எதிர்பார்ப்பும்..!
T20 World Cup 2024: சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!
சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Embed widget