மேலும் அறிய

அச்சுறுத்தும் கொரோனா தொற்று : தேங்கிய கருப்பட்டி, கவலையில் பனை தொழிலாளிகள்..

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம், வேம்பார், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் கருப்பட்டி தேங்கி கிடக்கிறது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 10 கிலோ கருப்பட்டி ரூ.2 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது 10 கிலோ கருப்பட்டி ரூ.1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

அச்சுறுத்தும் கொரோனா தொற்று : தேங்கிய கருப்பட்டி, கவலையில் பனை தொழிலாளிகள்..
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம், உப்பு உற்பத்தி, மீன்பிடி தொழில் விளங்கி வருகிறது. அதேபோன்று பனை தொழிலிலும் அதிக அளவில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் பனை தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பதநீர் இறக்கப்பட்டு வருகிறது. இதில் ஜூன், ஜூலை மாதங்களில் அதிக அளவில் பதநீர் இறக்கப்படுவது வழக்கம்
இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் பதநீர் உற்பத்தி தொடங்கியது. படிப்படியாக பதநீர் விற்பனை அதிகரித்து வந்தபோது, கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலுக்கு வந்து உள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. அதே போன்று பனை தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
 
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பதநீர் இறக்கி வருகின்றனர். வெளியூருக்கு சென்ற தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து பனை தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் பதநீரை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். விற்பனை செய்த பதநீர் போக, மீதம் உள்ள பதநீரை காய்ச்சி கருப்பட்டியாக தயாரித்து விற்பனை செய்து வந்தனர். தற்போது வழக்கம்போல் பதநீரை தொழிலாளர்கள் இறக்கி வருகின்றனர். ஆனால் ஊரடங்கு காரணமாக பதநீர் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் கருப்பட்டி தேங்கி கிடக்கிறது. தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம், வேம்பார், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் கருப்பட்டி தேங்கி கிடக்கிறது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 10 கிலோ கருப்பட்டி ரூ.2 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது 10 கிலோ கருப்பட்டி ரூ.1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதனையும் வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் பனை தொழிலாளர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

அச்சுறுத்தும் கொரோனா தொற்று : தேங்கிய கருப்பட்டி, கவலையில் பனை தொழிலாளிகள்..
இது குறித்து பனை தொழிலாளர் கூறும் போது, தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பனைமரங்கள் அதிகம் உள்ளன. இங்கு பனை தொழில் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பனை தொழிலில் நல்ல லாபம் கிடைத்து உள்ளது. இதனால் பலர் பனை தொழிலை மீண்டும் நாடி வந்தனர். மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் பனை தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது முழு ஊரடங்கு காரணமாக பதநீரை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கருப்பட்டி விலையும் குறைந்து விட்டது. ஆனாலும் வாங்குவதற்கு ஆட்கள் வர முடியாததால்  தேங்கி கிடக்கிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்து 500 டன் கருப்பட்டி தேங்கி உள்ளது. இதனால் பனை தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் பதநீர் விற்பனைக்கும், கருப்பட்டி விற்பனைக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ABP Premium

வீடியோ

தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
Christmas 2025: சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? - கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? -கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
TN Rain Alert: நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
Embed widget