மேலும் அறிய

விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்க்கும் மழை... நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் இந்த மழை நீடித்தது. விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் அதிகாலை 4 மணியளவில் மழை பெய்யத்தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது கொட்டித்தீர்த்தது.

இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது இதனால் மாணவ மாணவிகளின் நலனை கருதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் காலையில் இருந்து மதியம் வரை மழை ஓய்ந்திருந்த நிலையில் மாலை 3 மணிக்கு பிறகு விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக விழுப்புரம் பகுதியில் உள்ள பம்பை ஆற்று வாய்க்கால், ஆழாங்கால் வாய்க்கால், பானாம்பட்டு வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. அதுபோல் பம்பை ஆறு, எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணையாறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்க்கும் மழை... நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு!

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகாலை முதல் மழை தூறல் பெய்து  கொண்டே இருந்தது. பின்னர் காலை 10 மணி முதல் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கள்ளக்குறிச்சியில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாத காரணத்தால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டது.

இதனால் மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். இடைவிடாது பெய்த மழையினால் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்க செல்ல முடியாமல்  பெரும்பாலான பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.


விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்க்கும் மழை... நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு!

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர், நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனிடையே விவசாய சங்கத்தினர் ஆற்றில் வரும் தண்ணீரை அந்தந்த பகுதியில் உள்ள ஏரிகளுக்கு செல்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கல்வராயன்மலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஏரி, குளங்களின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget