மேலும் அறிய

விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்க்கும் மழை... நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் இந்த மழை நீடித்தது. விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் அதிகாலை 4 மணியளவில் மழை பெய்யத்தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது கொட்டித்தீர்த்தது.

இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது இதனால் மாணவ மாணவிகளின் நலனை கருதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் காலையில் இருந்து மதியம் வரை மழை ஓய்ந்திருந்த நிலையில் மாலை 3 மணிக்கு பிறகு விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக விழுப்புரம் பகுதியில் உள்ள பம்பை ஆற்று வாய்க்கால், ஆழாங்கால் வாய்க்கால், பானாம்பட்டு வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. அதுபோல் பம்பை ஆறு, எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணையாறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்க்கும் மழை... நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு!

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகாலை முதல் மழை தூறல் பெய்து  கொண்டே இருந்தது. பின்னர் காலை 10 மணி முதல் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கள்ளக்குறிச்சியில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாத காரணத்தால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டது.

இதனால் மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். இடைவிடாது பெய்த மழையினால் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்க செல்ல முடியாமல்  பெரும்பாலான பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.


விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்க்கும் மழை... நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு!

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர், நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனிடையே விவசாய சங்கத்தினர் ஆற்றில் வரும் தண்ணீரை அந்தந்த பகுதியில் உள்ள ஏரிகளுக்கு செல்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கல்வராயன்மலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஏரி, குளங்களின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget