மேலும் அறிய

AK Rajan | முதல்வர் ஸ்டாலினின் NEET ஆய்வு அதிரடி! யார் இந்த ஏ.கே ராஜன்?

நீட் தேர்வை ஆராய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமைத்துள்ள குழுவானது, நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மாற்று வழிமுறைகள், சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து தீர்வு காணும்!

"நீட் என்னும் தேர்வு தமிழ்நாட்டில் நடத்தப்படுவது செல்லாது என்பது என்னுடைய எண்ணம். 2007-ஆம் ஆண்டு நுழைவு தேர்வை ரத்துசெய்ய ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது, அந்த சட்டம் இன்றும் நிலுவையில் உள்ளது, நுணுக்கமாக அந்த சட்டத்தை ஆராய்ந்து, உச்சநீதிமன்றத்தில் வாதிட்டால் நிச்சயம் நீட் தேர்வுக்கு விலக்குபெற முடியும்" என கருணாநிதியின் நினைவஞ்சலி கூட்டத்தில் ஒருவர் பேசினார். யார் அவர்?

ஏ.கே ராஜன் யார்?

நீட் தேர்வுக்கு பதிலாக அனைத்து மாணவர்களும் பயன்பெறும் மாற்று வழிகளை ஆராய உயர்நிலை குழு அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த நீட் ஆராய்ச்சி குழுவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அப்பாய்ண்ட் செய்துள்ள நபர்தான், நீட் தேர்வுக்கு விலக்குபெற முடியும் என்று அன்றே உறுதியளித்த ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஏகே ராஜன்.

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்ப்பட்டி கிராமத்தில் பிறந்து இயற்பியல் துறையிலும், சட்டத் துறையிலும் கல்வி பயின்று, தமிழ்நாட்டில் இன்று நாம் பின்பற்றும் பல்வேறு சட்டங்களை உருவாக்கி தந்தவர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த ஏ.கே ராஜனை 1996-ஆம் ஆண்டு அழைத்த கருணாநிதி தமிழ்நாட்டின் சட்டத்துறை செயலாளராக நியமித்தார்.

  • ஏகே ராஜன் சட்டத்துறை செயலாளராக பொறுப்பேற்றவுடன் இயற்றிய முதல் சட்டம்தான் மெட்ராஸ் என நாம் அழைத்து வந்த பெயரை சென்னை என மாற்றியது.
  • சீட்டு கம்பெனி நடத்திவிட்டு, பணத்தை ஏமாற்றி எடுத்து செல்லும் நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் மீண்டும் தங்கள் பணத்தை மீட்க TNPID என்ற சட்டத்தை வரைந்தார், மிக பெரிய இடங்களில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. ஆனால் அது அனைத்தையும் கடந்து இயற்றப்பட்ட சட்டம் மூலம் 3000 கோடி ரூபாய் பணம் மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார் ஏகே ராஜன்.
  • வருங்கால செல்வங்களான மாணவர்களின் நலன் கருதி anti prohibition of ragging act மற்றும் eve teasing act என்னும் சட்டத்தை வரைந்தவர் ஏகே ராஜன்.

இப்படி சட்டத்துறை செயலாளராக தான் பொறுப்பேற்றிருந்த (1996-1999) காலத்தில் பல முக்கிய சட்டங்களை தமிழகத்திற்கு வகுத்தார் ஏகே ராஜன். பின்னர் சேலம் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி 2005-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும், சமூகநீதியின் மீது கல் எறியப்படும் போதெல்லாம் ஏகே ராஜனின் சட்ட ரீதியிலான பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்காக 2006-ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட ஆணையை செயல்படுத்துவதற்காக ஒரு உயர்நிலை குழு அமைக்கப்பட்டது, அந்த குழுவின் தலைவராக செயல்பட்டவர் நீதியரசர் ஏ.கே.ராஜன். மேலும் ஒளிவு மறைவில்லா ஊழலற்ற நிர்வாகத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்த ஏகே ராஜன் தலைமையில் நிர்வாக சீர்திருத்த குழு 2007-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. மேலும் கடந்தாண்டு வேளாண் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்த போது "விவசாயச் சட்டம் 2020" என்ற புத்தகத்தை எழுதினார் நீதியரசர் ஏகே ராஜன், அதை படித்த சிலர் "கூட்டாட்சி தத்துவத்தை இந்த சட்டம் எவ்வாறு நொறுக்கும்" என்பதை ஏகே ராஜனின் புத்தகம் வெளிக்கொண்டு வந்துள்ளதாக கருத்து தெரிவித்திருந்தனர். 

ஒரு நீதிபதியாக, வழக்கறிஞராக, சட்ட செயலாளராக பல பரிமாணங்களில் பரந்துபட்ட அனுபவம் உடையவர் ஏகே ராஜன். இவருக்கு சட்டமும் தெரியும், நிர்வாகமும் தெரியும், மக்களின் தேவை என்னவென்பதும் தெரியும். இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அடுத்த அசைன்மெண்ட் தான் நீட்! காத்திருப்போம்.

தலைப்பு செய்திகள்

Super El Niño: விரைவில் தாக்கும் எல்.நினோ.. சிக்கப்போகும் 12 மாவட்டங்கள்.. கலக்கத்தில் மக்கள்!
Super El Niño: விரைவில் தாக்கும் எல்.நினோ.. சிக்கப்போகும் 12 மாவட்டங்கள்.. கலக்கத்தில் மக்கள்!
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
வெரி ராங் ப்ரோ.. எல்லா திட்டத்துக்கும் வெற்றின்னு பேர் வைப்பீங்களா? - விஜயை விளாசிய தமிழிசை!
வெரி ராங் ப்ரோ.. எல்லா திட்டத்துக்கும் வெற்றின்னு பேர் வைப்பீங்களா? - விஜயை விளாசிய தமிழிசை!
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget