மேலும் அறிய

கரூர் : தகுந்த விலை கிடைக்காததால் மரங்களில் கருகும் முருங்கை : அரவக்குறிச்சி விவசாயிகள் வேதனை..!

கரூரில் விளையும் முருங்கையை ஏலத்தில் எடுத்து சென்னை , ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி என்றால் முருங்கை சாகுபடி பெயர் பெற்றது. இங்கு விளையும் விதை முருங்கை, ஒட்டுரக முருங்கைக்காய்கள் அதிக நீளம் மற்றும் சுவை மிகுந்தது என்பதால் கரூர் முருங்கைக்காய் என்றால் தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளான சேந்தமங்கலம், நாகம்பள்ளி, கீரனூர், வடக்கூர், கோவிலூர், சாத்தப்பாடி, தெத்துப்பட்டி, புங்கம்பாடி, ஈசநத்தம் உள்ளிட்ட 200-க்கும் அதிகமான கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்கின்றனர். 


கரூர் : தகுந்த விலை கிடைக்காததால் மரங்களில் கருகும் முருங்கை : அரவக்குறிச்சி விவசாயிகள் வேதனை..!

இதைத்தவிர க.பரமத்தி ஒன்றியத்தில் சின்னதாராபுரம், தென்னிலை, அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, ராஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முருங்கை பருவ காலத்தில் தினம் காலை 8 மெட்ரிக் டன் வரை அறுவடை செய்யப்படுகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் முருங்கைக்காய் 25 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்டப்பட்டு ஆறு ரோடு, மலைக்கோயிலூர், மூலனூர், அரவக்குறிச்சி புறவழிச்சாலை, கன்னிவாடி, சின்னதாராபுரம், மார்க்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15-க்கும் அதிகமாக தனியார் கமிஷன் மண்டிகள் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. 


கரூர் : தகுந்த விலை கிடைக்காததால் மரங்களில் கருகும் முருங்கை : அரவக்குறிச்சி விவசாயிகள் வேதனை..!

இங்கு ஏலத்தில் எடுக்கப்படும் முருங்கைக்காய்கள் ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், கேரளா, மகாராஷ்டிரம்  உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொடர் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. போக்குவரத்து முடக்கத்தால் வெளிமாநிலங்களுக்கு முருங்கைகளை கொண்டு செல்ல முடியவில்லை. உள்ளூர் தேவைகளான திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முருங்கை தேவையாக உள்ளது. இருந்தபோதிலும் தற்போது ஊரடங்கு உத்தரவால் எந்த பொது நிகழ்ச்சியிலும் நடைபெறாத நிலையில், உள்ளூர் தேவைக்கும் முருங்கை தேவை குறைவு என்பதாலும் முருங்கைக் காய்களை பறிக்காமல் மரங்களிலேயே விட்டுவிடுகின்றனர். ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கான முருங்கை காய்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். 


கரூர் : தகுந்த விலை கிடைக்காததால் மரங்களில் கருகும் முருங்கை : அரவக்குறிச்சி விவசாயிகள் வேதனை..!

இது குறித்து விவசாயி முருகேசன் கூறுகையில், ”ஒவ்வொரு ஆண்டும், மார்ச் தொடங்கி செப்டம்பர் வரை ஏழு மாதங்களுக்கு முருங்கை மகசூல் பெற முடியும் மீதமுள்ள 3 முதல் 4 மாதங்களில் முருங்கைக்காயின் விளைச்சல் கொஞ்சம் குறைவாக இருக்கும். இந்த வகையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். ஆனால் தற்போது உலகையே உலுக்கி வரும் நோய்த்தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அறுவடை செய்யப்படும் முருங்கைக்காய்களை கமிஷன் மண்டிகளுக்கு  கொண்டு செல்வதில்  நடைமுறைப் பிரச்சனை உள்ளது. வெளியூர்களில், வெளிமாநிலங்கள் அனுப்புவதிலும் சிக்கல் உள்ளது. அத்துடன் உள்ளூரில் முருங்கைகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கான முருங்கைக்காய்கள் காய்ந்து கருகுகின்றன. இதனால் இந்த ஆண்டின் முருங்கை சாகுபடியாளர்கள் வேதனையில் உள்ளனர்” என்று முருங்கை விவசாயி வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget