மேலும் அறிய

கரூர் : தகுந்த விலை கிடைக்காததால் மரங்களில் கருகும் முருங்கை : அரவக்குறிச்சி விவசாயிகள் வேதனை..!

கரூரில் விளையும் முருங்கையை ஏலத்தில் எடுத்து சென்னை , ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி என்றால் முருங்கை சாகுபடி பெயர் பெற்றது. இங்கு விளையும் விதை முருங்கை, ஒட்டுரக முருங்கைக்காய்கள் அதிக நீளம் மற்றும் சுவை மிகுந்தது என்பதால் கரூர் முருங்கைக்காய் என்றால் தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளான சேந்தமங்கலம், நாகம்பள்ளி, கீரனூர், வடக்கூர், கோவிலூர், சாத்தப்பாடி, தெத்துப்பட்டி, புங்கம்பாடி, ஈசநத்தம் உள்ளிட்ட 200-க்கும் அதிகமான கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்கின்றனர். 


கரூர் : தகுந்த விலை கிடைக்காததால் மரங்களில் கருகும் முருங்கை : அரவக்குறிச்சி விவசாயிகள் வேதனை..!

இதைத்தவிர க.பரமத்தி ஒன்றியத்தில் சின்னதாராபுரம், தென்னிலை, அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, ராஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முருங்கை பருவ காலத்தில் தினம் காலை 8 மெட்ரிக் டன் வரை அறுவடை செய்யப்படுகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் முருங்கைக்காய் 25 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்டப்பட்டு ஆறு ரோடு, மலைக்கோயிலூர், மூலனூர், அரவக்குறிச்சி புறவழிச்சாலை, கன்னிவாடி, சின்னதாராபுரம், மார்க்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15-க்கும் அதிகமாக தனியார் கமிஷன் மண்டிகள் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. 


கரூர் : தகுந்த விலை கிடைக்காததால் மரங்களில் கருகும் முருங்கை : அரவக்குறிச்சி விவசாயிகள் வேதனை..!

இங்கு ஏலத்தில் எடுக்கப்படும் முருங்கைக்காய்கள் ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், கேரளா, மகாராஷ்டிரம்  உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொடர் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. போக்குவரத்து முடக்கத்தால் வெளிமாநிலங்களுக்கு முருங்கைகளை கொண்டு செல்ல முடியவில்லை. உள்ளூர் தேவைகளான திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முருங்கை தேவையாக உள்ளது. இருந்தபோதிலும் தற்போது ஊரடங்கு உத்தரவால் எந்த பொது நிகழ்ச்சியிலும் நடைபெறாத நிலையில், உள்ளூர் தேவைக்கும் முருங்கை தேவை குறைவு என்பதாலும் முருங்கைக் காய்களை பறிக்காமல் மரங்களிலேயே விட்டுவிடுகின்றனர். ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கான முருங்கை காய்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். 


கரூர் : தகுந்த விலை கிடைக்காததால் மரங்களில் கருகும் முருங்கை : அரவக்குறிச்சி விவசாயிகள் வேதனை..!

இது குறித்து விவசாயி முருகேசன் கூறுகையில், ”ஒவ்வொரு ஆண்டும், மார்ச் தொடங்கி செப்டம்பர் வரை ஏழு மாதங்களுக்கு முருங்கை மகசூல் பெற முடியும் மீதமுள்ள 3 முதல் 4 மாதங்களில் முருங்கைக்காயின் விளைச்சல் கொஞ்சம் குறைவாக இருக்கும். இந்த வகையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். ஆனால் தற்போது உலகையே உலுக்கி வரும் நோய்த்தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அறுவடை செய்யப்படும் முருங்கைக்காய்களை கமிஷன் மண்டிகளுக்கு  கொண்டு செல்வதில்  நடைமுறைப் பிரச்சனை உள்ளது. வெளியூர்களில், வெளிமாநிலங்கள் அனுப்புவதிலும் சிக்கல் உள்ளது. அத்துடன் உள்ளூரில் முருங்கைகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கான முருங்கைக்காய்கள் காய்ந்து கருகுகின்றன. இதனால் இந்த ஆண்டின் முருங்கை சாகுபடியாளர்கள் வேதனையில் உள்ளனர்” என்று முருங்கை விவசாயி வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Team Of The Year: இதுதான்யா டீமு..!  பட்டாசான ஓபனிங், கடப்பாரை மிடில் ஆர்டர், ஃபயரான கேப்டன் - எதிர்க்க முடியுமா?
IPL 2025 Team Of The Year: இதுதான்யா டீமு..! பட்டாசான ஓபனிங், கடப்பாரை மிடில் ஆர்டர், ஃபயரான கேப்டன் - எதிர்க்க முடியுமா?
Ukraine Strikes Again: ரஷ்யாவை கதறவிடும் உக்ரைன்; மீண்டும் மிகப்பெரிய தாக்குதல், முக்கிய பாலம் தகர்ப்பு - வீடியோ
ரஷ்யாவை கதறவிடும் உக்ரைன்; மீண்டும் மிகப்பெரிய தாக்குதல், முக்கிய பாலம் தகர்ப்பு - வீடியோ
IPL 2025 Awards: யாருக்கு என்ன விருதுகள்?ஆரஞ்சு, ஊதா, MVP பரிசுகள், சாய் சுதர்ஷன் செய்த சம்பவம் - பரிசுத்தொகை
IPL 2025 Awards: யாருக்கு என்ன விருதுகள்?ஆரஞ்சு, ஊதா, MVP பரிசுகள், சாய் சுதர்ஷன் செய்த சம்பவம் - பரிசுத்தொகை
Tata Harrier EV: ஆத்தி..! ரூ.21.49 லட்சத்திற்கு வொர்த்தா? காருக்குள் ஒரு லாரி தொழில்நுட்ப அம்சங்கள், ஹாரியரில் டாடா புரட்சி
Tata Harrier EV: ஆத்தி..! ரூ.21.49 லட்சத்திற்கு வொர்த்தா? காருக்குள் ஒரு லாரி தொழில்நுட்ப அம்சங்கள், ஹாரியரில் டாடா புரட்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Team Of The Year: இதுதான்யா டீமு..!  பட்டாசான ஓபனிங், கடப்பாரை மிடில் ஆர்டர், ஃபயரான கேப்டன் - எதிர்க்க முடியுமா?
IPL 2025 Team Of The Year: இதுதான்யா டீமு..! பட்டாசான ஓபனிங், கடப்பாரை மிடில் ஆர்டர், ஃபயரான கேப்டன் - எதிர்க்க முடியுமா?
Ukraine Strikes Again: ரஷ்யாவை கதறவிடும் உக்ரைன்; மீண்டும் மிகப்பெரிய தாக்குதல், முக்கிய பாலம் தகர்ப்பு - வீடியோ
ரஷ்யாவை கதறவிடும் உக்ரைன்; மீண்டும் மிகப்பெரிய தாக்குதல், முக்கிய பாலம் தகர்ப்பு - வீடியோ
IPL 2025 Awards: யாருக்கு என்ன விருதுகள்?ஆரஞ்சு, ஊதா, MVP பரிசுகள், சாய் சுதர்ஷன் செய்த சம்பவம் - பரிசுத்தொகை
IPL 2025 Awards: யாருக்கு என்ன விருதுகள்?ஆரஞ்சு, ஊதா, MVP பரிசுகள், சாய் சுதர்ஷன் செய்த சம்பவம் - பரிசுத்தொகை
Tata Harrier EV: ஆத்தி..! ரூ.21.49 லட்சத்திற்கு வொர்த்தா? காருக்குள் ஒரு லாரி தொழில்நுட்ப அம்சங்கள், ஹாரியரில் டாடா புரட்சி
Tata Harrier EV: ஆத்தி..! ரூ.21.49 லட்சத்திற்கு வொர்த்தா? காருக்குள் ஒரு லாரி தொழில்நுட்ப அம்சங்கள், ஹாரியரில் டாடா புரட்சி
South Trains Traffic Change: தென் மாவட்ட மக்களே.! ரயில் போக்குவரத்தில் மாற்றம் - விவரத்த தெரிஞ்சுக்கிட்டு பிளான் பண்ணுங்க
தென் மாவட்ட மக்களே.! ரயில் போக்குவரத்தில் மாற்றம் - விவரத்த தெரிஞ்சுக்கிட்டு பிளான் பண்ணுங்க
IPL 2025 RCB: 18 வருஷமும் வொர்த்து தான்..! கைகளில் ஐபிஎல் கோப்பையை ஏந்தி துள்ளி குதித்த கோலி - வீடியோ
IPL 2025 RCB: 18 வருஷமும் வொர்த்து தான்..! கைகளில் ஐபிஎல் கோப்பையை ஏந்தி துள்ளி குதித்த கோலி - வீடியோ
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Virat Kohli:
Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
Embed widget