மேலும் அறிய

சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து தாதுமணல் கடத்தல்?- விவி நிறுவன ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு

’’2013ஆம் ஆண்டு சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் உள்ள குடோன்களில் இருந்து இந்த தாதுமணல்கள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்’’

தூத்துக்குடி பகுதியில் உள்ள தனியார் பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் முறைகேடாக இல்மனைட் தாதுமணல் கடத்தி கொண்டு வரப்படுவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிப்காட் போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் சுமார் 9 டன் தாதுமணல் இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு மேலும் 4 லாரிகளில் கொண்டு வரப்பட்ட தாதுமணல் வைக்கப்பட்டிருந்தது. 

சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து தாதுமணல் கடத்தல்?- விவி நிறுவன ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு
 
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில், எஸ்பி ஜெயக்குமார், கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், வட்டாட்சியர் ஜஸ்டின், மதுரை கனிம வள துணை இயக்குநர் சட்டநாதன் சங்கர், புவியியல் அலுவலர் சுகிர்தா ரஹிமா மற்றும் போலீசார் அந்த நிறுவனத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அந்த தாதுமணல் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் உள்ளதா, உரிய அனுமதி பெறப்பட்டு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த தாதுமணல் மாதிரி சேகரிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது 

சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து தாதுமணல் கடத்தல்?- விவி நிறுவன ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு
 
மேலும் கடந்த 2013ஆம் ஆண்டு தூத்துக்குடி, முத்தையாபுரம் உள்ளிட்ட சில குடோன்களில் வைக்கப்பட்டிருந்த தாதுமணல் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனை எடுப்பதற்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த குடோன்களில் இருந்து தாதுமணல் எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் குடோன்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
 
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கனரக வாகனங்கள் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நள்ளிரவில் இது குறித்து மீளவிட்டான் கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் கண்ணாவின் புகாரின்படி விவி நிறுவன உரிமையாளர், 5 லாரி டிரைவர்கள், மற்றும் சிலர் மீது  வழக்குப்பதிவு செய்தனர். இதில் லாரி ஓட்டுநர்கள் இசக்கி, மாரிமுத்து, முருகன், சடையாண்டி, செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் துறைமுக சாலையில் உள்ள விவி குடோன் சூபர்வைசரான கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரையும் கைது செய்தனர். 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
"திருச்சி டூ திருப்பதி - இனி ஜில்லுன்னு போகலாம்’ எப்படி தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
EPS Stalin: உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி - ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Chennai Disaster Management Authority: சென்னைக்கு ஸ்பெஷலான டீம் - மழை, வெள்ளம் வந்தாலும் பயமில்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
'கால்நடை மருத்துவ படிப்பு’ விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..!
"திருச்சி டூ திருப்பதி - இனி ஜில்லுன்னு போகலாம்’ எப்படி தெரியுமா..?
நீலகிரியில் நிற்காமல் பெய்யும் மழை! அவலாஞ்சியில் 35.3 செ.மீ.. கடும் குளிரில் ஊட்டி
நீலகிரியில் நிற்காமல் பெய்யும் மழை! அவலாஞ்சியில் 35.3 செ.மீ.. கடும் குளிரில் ஊட்டி
காலையிலேயே கோர விபத்து.. லாரி-பேருந்து மோதல்.. பயணிகளுக்கு என்ன ஆச்சு?
காலையிலேயே கோர விபத்து.. லாரி-பேருந்து மோதல்.. பயணிகளுக்கு என்ன ஆச்சு?
Royal Enfied Hybrid Bike: போட்டியே இல்லை.. ஹைப்ரிட் மாடலில் ராயல் என்ஃபீல்ட் பைக் - லிட்டருக்கு 50KM மைலேஜ் - இன்ஜின், விலை
Royal Enfied Hybrid Bike: போட்டியே இல்லை.. ஹைப்ரிட் மாடலில் ராயல் என்ஃபீல்ட் பைக் - லிட்டருக்கு 50KM மைலேஜ் - இன்ஜின், விலை
Ind Pak China: பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் - என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா
Ind Pak China: பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் - என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா
Embed widget