மேலும் அறிய

KC Veeramani: ‘சொத்துக் குவிப்பு வழக்கில் சம்மன் கொடுக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை’ கைதாகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி..?

’கே.சி.வீரமணி இப்போது கைது செய்யப்பட்டால், அது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினருக்கே சாதகமாக அமையும் என கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்’

வருமானத்திற்கு அதிகமாக 654% அளவுக்கு சொத்து குவித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில், அவரை நேரடியாக வரவழைத்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் வழங்கவும் லஞ்ச ஒழிப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

KC Veeramani: ‘சொத்துக் குவிப்பு வழக்கில் சம்மன் கொடுக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை’ கைதாகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி..?
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

கடந்த அதிமுக ஆட்சியில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, 5 ஆண்டு காலத்தில் முறைகேடாக 28.78 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, கடந்த 16ஆம் தேதி அவருக்கு சொந்தமான ஜோலார்பேட்டை அருகேயுள்ள இடையம்பட்டி வீடு, ஹோட்டல், வேளாண் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அதில், 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி பொருட்கள், கணக்கில் வராத 34 லட்சம் ரொக்கம், 1.80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி, ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 9 சொகுசு கார்களை பறிமுதல் செய்த போலீசார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 551 யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர்.KC Veeramani: ‘சொத்துக் குவிப்பு வழக்கில் சம்மன் கொடுக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை’ கைதாகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி..?

கே.சி.வீரமணிக்கு விரைவில் சம்மன்

இந்நிலையில், இந்த வழக்கு குறித்தும் அவருக்கு சொந்தமான இடங்கலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை பற்றியும் கே.சி.வீரமணியை சென்னை அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக அவருக்கு விரைவில் சம்மன் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கைதாகிறாரா கே.சி.வீரமணி

கே.சி.வீரமணி நேரடியாக சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தும்போதே அவர் கைது செய்யப்படவும் அதிக வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மட்டுமில்லாமல், சட்டவிரோதமாக வெளிநாட்டு கரன்சியை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது, மணல் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் கே.சி.வீரமணி மணி மீது பாயும் என கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும்

9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கே.சி.வீரமணியி கைது செய்யப்பட்டால், அது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட அவரது ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டங்களில் எதிரொலிக்கும்.

யாருக்கு சாதகம் ?

ஒருவேளை கே.சி.வீரமணி கைது செய்யப்பட்டால், ஊழல் பேர்வழி என்று சொல்லி திமுகவினரும், அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சொல்லி அதிமுகவினரும் மக்களிடம் வாக்குகளை கவர முனைவார்கள்.  கே.சி.வீரமணி கைது செய்யப்பட்டால் அது உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினருக்கே சாதகமாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் திட்டமிட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி மக்களின் அனுதாபத்தை பெற்று இந்த மூன்று மாவட்டங்களில் அதிமுகவினர் அதிக இடங்களை வெல்லவும் வாய்ப்பு உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை திட்டம் என்ன ?

கே.சி.வீரமணியை கைது செய்யாமல், விசாரணைக்கு என்று பலமுறை அழைத்து குடைச்சல் கொடுக்கவும், உள்ளாட்சி தேர்தலில் அவரது கவனம் செலுத்தாமல் இருக்கும் வகையில் அலைக்கழிக்க வைக்கவும் லஞ்ச ஒழிப்புத் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மணல் கடத்தல் தொடர்பாகவும் அவர் மீது தனியாக ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசாரணை ஆஜராகுமாறும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget