மேலும் அறிய

"மாவட்ட வாரியாக தகவல் பெறும் உரிமை சட்ட அலுவலகம்" - மாநில தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆணையர்

சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அதிகாரிகளை துன்புறுத்தும் வகையில் கேள்விகளை கேட்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆணையர் பிரதாப் குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் உரிய பதில்களை அளிக்கப்படாத மனுக்கள் மீதான விசாரணை இன்றைய தினம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் அரசு அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாநில தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆணையர் பிரதாப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியது, "மாநில தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு வரும் மனுக்களை அந்தந்த மாவட்டத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றோம். 

சேலம் மாவட்டத்தில் 60 மனுக்கள் மீது இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை விசாரித்த மனுக்களில் தவறான பதிலளித்த வருவாய் துறையை சேர்ந்த இரண்டு பொது தகவல் அலுவலர்களுக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் சராசரியாக ஆயிரம் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் 20 முதல் 30 சதவிகித பொது அலுவலர் தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.

ஊரக வளர்ச்சி வருவாய்த்துறை ஆகியவற்றிலிருந்து அதிகப்படியான மேல்முறையீடு மனுக்கள் வருகிறது. வருவாய்த்துறையில் ஆவணங்களை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பான ஆவணங்களைக் கூட மனுதாரர்கள் கேட்கின்றனர். இதனால் வருவாய் துறையில் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக ஆவணப்படுத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரையாக முன் வைத்துள்ளோம் என்றார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மொத்தம் 28 சட்டப்பிரிவுகள் மட்டுமே உள்ளது. அதில் இரண்டு மூன்று சட்டப்பிரிவுகள் தெரிந்திருந்தாலே சரியான கேள்விகளை கேட்டு மனுதாரர்கள் பதில் பெற முடியும். 

அதனால் மனுதாரர்கள் தெளிவான கேள்விகளை கேட்க வேண்டும் எனவும் கூறினார். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அதிகாரிகளை துன்புறுத்தும் வகையில் கேள்விகளை கேட்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனைத்து துறைகளிலும் தினசரி 500 க்கும் மேற்பட்டவர்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்கின்றனர். இதில் சரியாக வகையில் பதிலளிக்காத அலுவலர்கள் மீது புகார் மனு அளிக்கின்றனர். அவற்றை பரிந்துரை செய்து விசாரணை நடத்த அவர்களுக்கு மீண்டும் அந்த புகார் மனு அனுப்பப்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத சூழ்நிலை வருகிறது. எனவே மாநில, மாவட்ட அளவில் பொது தகவல் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget