மேலும் அறிய

"மாவட்ட வாரியாக தகவல் பெறும் உரிமை சட்ட அலுவலகம்" - மாநில தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆணையர்

சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அதிகாரிகளை துன்புறுத்தும் வகையில் கேள்விகளை கேட்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆணையர் பிரதாப் குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் உரிய பதில்களை அளிக்கப்படாத மனுக்கள் மீதான விசாரணை இன்றைய தினம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் அரசு அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாநில தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆணையர் பிரதாப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியது, "மாநில தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு வரும் மனுக்களை அந்தந்த மாவட்டத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றோம். 

சேலம் மாவட்டத்தில் 60 மனுக்கள் மீது இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை விசாரித்த மனுக்களில் தவறான பதிலளித்த வருவாய் துறையை சேர்ந்த இரண்டு பொது தகவல் அலுவலர்களுக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் சராசரியாக ஆயிரம் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் 20 முதல் 30 சதவிகித பொது அலுவலர் தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.

ஊரக வளர்ச்சி வருவாய்த்துறை ஆகியவற்றிலிருந்து அதிகப்படியான மேல்முறையீடு மனுக்கள் வருகிறது. வருவாய்த்துறையில் ஆவணங்களை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பான ஆவணங்களைக் கூட மனுதாரர்கள் கேட்கின்றனர். இதனால் வருவாய் துறையில் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக ஆவணப்படுத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரையாக முன் வைத்துள்ளோம் என்றார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மொத்தம் 28 சட்டப்பிரிவுகள் மட்டுமே உள்ளது. அதில் இரண்டு மூன்று சட்டப்பிரிவுகள் தெரிந்திருந்தாலே சரியான கேள்விகளை கேட்டு மனுதாரர்கள் பதில் பெற முடியும். 

அதனால் மனுதாரர்கள் தெளிவான கேள்விகளை கேட்க வேண்டும் எனவும் கூறினார். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அதிகாரிகளை துன்புறுத்தும் வகையில் கேள்விகளை கேட்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனைத்து துறைகளிலும் தினசரி 500 க்கும் மேற்பட்டவர்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்கின்றனர். இதில் சரியாக வகையில் பதிலளிக்காத அலுவலர்கள் மீது புகார் மனு அளிக்கின்றனர். அவற்றை பரிந்துரை செய்து விசாரணை நடத்த அவர்களுக்கு மீண்டும் அந்த புகார் மனு அனுப்பப்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத சூழ்நிலை வருகிறது. எனவே மாநில, மாவட்ட அளவில் பொது தகவல் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Embed widget