மேலும் அறிய

இது 3 ஆயிரம் ஆண்டுகள் பழசு... வந்தவாசியில் கிடைத்த இரும்பு உருக்காலை எச்சம்!

வந்தவாசி பகுதியில் பெருங்கற்கால வாழ்விடம், தொழிற்கூடம் மற்றும் ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தவைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் அவ்வமைப்பைச் சேர்ந்த பழனி, விஜயன் ஆகியோர் இணைந்து வந்தவாசி பகுதியில் உள்ள குணகம்பண்டி கிராமம் பகுதியில் களஆய்வு செய்தனர். அப்பொழுது அவ்வூரை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தை சுற்றிலும் ஏராளமான பெருங்கற்கால சின்னங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மரபுசார் அமைப்பின் தவைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசுகையில்

நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற நடைமுறைகள் மற்றும் சிற்பங்கள் குறித்து நாங்கள் வார்த்தில் ஒரு முறை அதனைப்பற்றி ஆய்வு மேற்கொள்வோம் அந்த வகையில் இந்த வாரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்தவுள்ள மாந்தாங்கல் ஊரின் கிழக்குப் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் ஏராளமான இரும்பு உருக்கு கழிவுகளும் சுமார் 4 செ.மீ சுற்றளவு கொண்ட இரு துண்டு குழாய்களும் மேற்பரப்பிலே கள ஆய்வில் கண்டறியப்பட்டது. இக்குழாய்களின் மத்தியில் உள்ள துவாரம் 1 செமீ சுற்றளவுடன் காணப்படுகிறது. சுடுமண்ணால் ஆன இக்குழாய்கள் மேற்பரப்பில் சிதைவுற்று உள்ளது. இந்த இரும்பு இருக்கும் உலைகளை எரியூட்டுவதற்காகத் துருத்தி போலத் தூரத்திலிருந்து இதுபோன்ற குழாய்கள் மூலம் காற்றுக் கொண்டுபோக இந்தவடிவமைப்பை பயன்படுத்தி இருக்கின்றனர்.

 


இது 3 ஆயிரம் ஆண்டுகள் பழசு... வந்தவாசியில் கிடைத்த இரும்பு உருக்காலை எச்சம்!

 

மேலும் அப்பகுதியில் ஏராளமான கருப்பு, சிவப்பு , போன்ற பானை ஓடுகளும் இரும்பு உருக்கு கழிவுகளும் அதிகளவில் காணப்படுகிறது. இதன் மூலம் இங்கா பழங்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பு பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்கூடமாக இப்பகுதியை உபயோகித்தது தெரியவருகிறது.

இப்பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முன் இரும்பு காலத்தில் வாழ்ந்த ஆதிமனிதன் பாறைகளிலில் இருந்த இரும்பை உலையில் வைத்து தனியாகப் பிரித்து அதன் மூலம் கத்தி, ஈட்டி, கோடாரி, வேல், போன்று பல பொருட்களைத் தயாரித்துள்ளதை அறியப்படுகிறது.இப்பகுதியை ஒட்டிய மலைப்பகுதியின் மற்றொரு புறம் இதற்கு இணையாக நீண்ட கோடு போன்ற மற்றொரு மலையும் காணப்படுகிறது. இந்த ஒரு மலைப்பகுதியின் மத்தியில் பெரிய சமவெளி பரப்பு காணப்படுகிறது. இவ்விடத்திலும் ஏராளமான பானை ஓடுகள் மற்றும் கல்லாயுதங்கள் போன்றவை காணக்கிடைக்கிறது. மலைகளுக்கிடையே அமைந்துள்ள இச்சமவெளிப் பகுதி மனிதர்களின் வாழனிடப் பகுதியாக இருந்திருக்கக் கூடும் என்று அறியமுடிகிறது.

 

 


இது 3 ஆயிரம் ஆண்டுகள் பழசு... வந்தவாசியில் கிடைத்த இரும்பு உருக்காலை எச்சம்!

 

இப்பகுதிக்கு மேற்கு திசையில் ஏராளமான கல்வட்டங்கள் காணக்கிடைக்கிறது. இந்த கல்வட்டங்கள் சுமார் 10- க்கும் மேற்பட்ட பெரிய கல்வட்டங்கள் எந்த சிதைவும் இன்றி காணப்படுகிறது. ஏனைய கல்வட்டங்கள் விவசாயம் மற்றும் ஊர் வளர்ச்சியின் காரணமாகச் சிதைந்து அதன் எச்சங்கள் அப்படியே காணமுடிகிறது. மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இன்றைய மாத்தாங்கல் ஊரின் சுடுகாடும் இந்த ஈமச்சின்னங்கள் நிறைந்த பகுதியில் அமைந்திருப்பதே சுமார் 3 வருடம் முன்பு இவ்வூரில் சாலையோரம் இருந்த பெரிய கல்லை நகர்த்திய பொழுது ஈமப்பேழை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவை திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 3000 வருடங்கள் தொன்மை வாய்ந்த பெருங்கற்கால் அடையாளங்கள் உள்ள இவ்வூரில் தொல்லியல் துறை முறையாக அகழாய்வு மேற்கொண்டால் இப்பகுதியின் தொன்மை மற்றும் ஏராளமான புதிய வீசயங்கள் வெளி உலயிற்குத் தெரிய வரும், என்று தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.