மேலும் அறிய

மதுபானம் வாங்க முண்டியடிப்பு; மிலிட்ரி கேண்டினுக்கு ‛சீல்’ வைப்பு

கொரோனா விதிமுறை பின்பற்றப்படவில்லை எனக்கூறி கேண்டினை அதிகாரிகள் சீல் வைத்ததால், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும்-அதிகாரிகளுக்கும் தகராறு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் புதுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மிலிட்டிரி கேன்டினில் கொரோனா நடத்தை வழிமுறைகளை பின்பற்றாமல் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மதுபானங்கள் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

ராணுவத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் குடும்பத்தினர் மட்டும் பயன்பெறும் வகையில்  கேன்டீன்கள் தமிழ்நாட்டில் ஓவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு  வருகிறது.

இந்நிலையில், கரூர் கேன்டீனில்  இன்று காலை முதல் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் சொந்த பயன்பாடுகளுக்காக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து, 500க்கும் மேற்பட்டோர் மதுப்பிரியர்கள் ஒரே நேரத்தில் கூட அரம்பித்தனர். 


மதுபானம் வாங்க முண்டியடிப்பு; மிலிட்ரி கேண்டினுக்கு ‛சீல்’ வைப்பு

மிலிட்டரி கேன்டினில் கொரோனா நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற செய்தி கடலூர் வருவாய்த்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த இடத்துக்கு விரைந்த வருவாய்த்துறை அதிகாரிகள், "மதுபானம் வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கட்டாயம் 6 அடி சமூக இடைவெளி இருக்கவேண்டும்" என கேன்டின் நிர்வாகத்திடமும், கூட்டமாக நின்றுக்  கொண்டிருந்தவர்களிடமும்  அறிவுரைகள் வழங்கினர். தொற்று பரவும் அபாயம் ஏற்படுத்தும் விதமாக நடந்துக் கொண்டால்  மிலிட்டரி கேன்டீனுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.  

இருப்பினும், மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முழு முனைப்புடன் இருந்த மதுப்பிரியர்கள் அதிகாரிகளின் எச்சரிக்கைகளை காற்றில் பறக்க விட்டனர். 6 அடி சமூக இடைவெளி இல்லாமலும்,முகக்கவசம் ஒழுங்காக அணியாமலும் கூட்டமாக இருந்தால், மிலிட்டரி கேன்டீனுக்கு அதிகாரிகள் உடனடியாக  சீல் வைத்தனர்.

மதுபானம் வாங்க முண்டியடிப்பு; மிலிட்ரி கேண்டினுக்கு ‛சீல்’ வைப்பு

இதனையடுத்து, அரசு அதிகாரிகளுக்கும், மது பாட்டில்கள் வாங்க வந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில், வட்டாட்சியர் பலராமன் நடத்திய பேச்சுவார்ததையின் மூலம் டோக்கன்கள் மூலம் மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. டோக்கன் பெற்ற நபர் வரிசையில்  உரிய இடத்தில் நின்று, முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளி  கடைப்பிடித்து மதுபாட்டில்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். மதுபானம் வாங்கிச் செல்லும் நபர்கள் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் அருந்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து மிலிட்டரி கேன்டினுக்கு வைக்கப்பட சீல் அகற்றப்பட்டது.               

கடலூர் மாவட்டம்:  

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மேலும், மாவட்டங்கள் 3 வகைகளாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில், கடலூர் மாவட்டம் கொரோனா தொற்று உறுதி விகிதம் குறைந்து காணப்படும் இரண்டாவது வகை மாவட்டத்தில் உள்ளது. 

முன்னதாக, கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படும் 27 மாவட்டங்களில் வரும் ஜூன் 14 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இயங்க அனுமதி அளித்தது. மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களில் உடல் தகுதி வாய்ந்த (medically fit person and without any co-morbid condition) 55 வயதிற்கு கீழுள்ள அனைத்து பணியாளர்களும் பணியில் இருக்கவேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
Embed widget