மேலும் அறிய

கரூரில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசி; சில இடங்களில் மருந்து பற்றாக்குறை!

கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி முகாமில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 தடுப்பூசி முடிந்ததால் வரிசையில் நின்ற பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு சார்பில் கோவிசீல்டு மற்றும் கோவாக்சீன் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி வர கால தாமதம் ஆனதால் தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக தடுப்பூசி முகாமில் தட்டுப்பாடு ஏற்பட்டு தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேபோல் கரூர் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து தொடர்ந்து 5 நாட்கள் தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்றது. 


கரூரில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசி; சில இடங்களில் மருந்து பற்றாக்குறை!

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நேற்று 5-வது நாளாக பொதுமக்களுக்கு, தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கரூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் இரண்டு நாளில் கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என கடந்த இரண்டு நாட்கள் முன் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கரூரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 1000 தடுப்பு ஊசி போடப்படும் எனவும், அவை கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு எங்கு போடப்படும் எனவும் ஒரு சிறப்பு முகாமில் எவ்வளவு தடுப்பு ஊசிகள் போடப்படும் எனவும் விரிவான தகவல்களுடன் செய்திக்குறிப்பில் வெளியிட்டிருந்தனர். அதேபோல் இன்று ஒரேநாளில் கரூர் மாவட்டத்திற்கு ஆயிரம் தடுப்பூசிகள் போட ஆயத்த பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி முகாமில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 தடுப்பூசி முடிந்ததால் காலை ஆறு மணியிலிருந்து வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்கள் போலீசாரிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


கரூரில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசி; சில இடங்களில் மருந்து பற்றாக்குறை!

கரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் தடுப்பூசி போடப்படும் முகாம்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தபிறகு  பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் அவரை சூழ்ந்துகொண்டு எங்களுக்கு டோக்கன் வழங்கியும், குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசி இல்லை என அறிவித்து தங்களை அதிர்ச்சியடை செய்வதாக குற்றம் சாட்டினர்.

சிரமமின்றி தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூடியிருந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியிடம் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சுகாதார துறை இணைந்து பேசி பொது மக்களுக்கு சிரமமின்றி தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும் அங்கிருந்த பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தார். 


கரூரில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசி; சில இடங்களில் மருந்து பற்றாக்குறை!

கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களாக தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்படாததால் விரக்தியில் இருந்த பொது மக்களுக்கு இன்று 30க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போடப்படும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் செய்தியால் சற்று ஆறுதல் அடைந்தனர். பின்னர் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். எனினும், தடுப்பூசி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நாள் தோறும் சிறப்பு முகாமில் போட வேண்டிய கட்டாயத்தில் மாவட்ட நிர்வாகம் இருப்பதால் அங்கு அதிக அளவில் பொதுமக்கள் வருகையால் ஒரு சில இடங்களில் சில ,சில சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது. 

கரூரில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசி; சில இடங்களில் மருந்து பற்றாக்குறை!

கரூரில் ஐந்து நாள்களுக்குப் பிறகு  தடுப்பூசி முகாம் இன்று முதல் செயல்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
சென்னை மக்களுக்கு பறந்த ஹாப்பி நியூஸ்! அண்ணா பல்கலைக்கழக சிக்னலில் மாறப்போகும் மாபெரும் காட்சி!
சென்னை மக்களுக்கு பறந்த ஹாப்பி நியூஸ்! அண்ணா பல்கலைக்கழக சிக்னலில் மாறப்போகும் மாபெரும் காட்சி!
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை.. ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை! ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
Embed widget