மேலும் அறிய

கரூரில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசி; சில இடங்களில் மருந்து பற்றாக்குறை!

கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி முகாமில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 தடுப்பூசி முடிந்ததால் வரிசையில் நின்ற பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு சார்பில் கோவிசீல்டு மற்றும் கோவாக்சீன் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி வர கால தாமதம் ஆனதால் தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக தடுப்பூசி முகாமில் தட்டுப்பாடு ஏற்பட்டு தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேபோல் கரூர் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து தொடர்ந்து 5 நாட்கள் தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்றது. 


கரூரில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசி; சில இடங்களில் மருந்து பற்றாக்குறை!

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நேற்று 5-வது நாளாக பொதுமக்களுக்கு, தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கரூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் இரண்டு நாளில் கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என கடந்த இரண்டு நாட்கள் முன் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கரூரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 1000 தடுப்பு ஊசி போடப்படும் எனவும், அவை கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு எங்கு போடப்படும் எனவும் ஒரு சிறப்பு முகாமில் எவ்வளவு தடுப்பு ஊசிகள் போடப்படும் எனவும் விரிவான தகவல்களுடன் செய்திக்குறிப்பில் வெளியிட்டிருந்தனர். அதேபோல் இன்று ஒரேநாளில் கரூர் மாவட்டத்திற்கு ஆயிரம் தடுப்பூசிகள் போட ஆயத்த பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி முகாமில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 தடுப்பூசி முடிந்ததால் காலை ஆறு மணியிலிருந்து வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்கள் போலீசாரிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


கரூரில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசி; சில இடங்களில் மருந்து பற்றாக்குறை!

கரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் தடுப்பூசி போடப்படும் முகாம்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தபிறகு  பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் அவரை சூழ்ந்துகொண்டு எங்களுக்கு டோக்கன் வழங்கியும், குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசி இல்லை என அறிவித்து தங்களை அதிர்ச்சியடை செய்வதாக குற்றம் சாட்டினர்.

சிரமமின்றி தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூடியிருந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியிடம் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சுகாதார துறை இணைந்து பேசி பொது மக்களுக்கு சிரமமின்றி தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும் அங்கிருந்த பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தார். 


கரூரில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசி; சில இடங்களில் மருந்து பற்றாக்குறை!

கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களாக தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்படாததால் விரக்தியில் இருந்த பொது மக்களுக்கு இன்று 30க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போடப்படும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் செய்தியால் சற்று ஆறுதல் அடைந்தனர். பின்னர் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். எனினும், தடுப்பூசி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நாள் தோறும் சிறப்பு முகாமில் போட வேண்டிய கட்டாயத்தில் மாவட்ட நிர்வாகம் இருப்பதால் அங்கு அதிக அளவில் பொதுமக்கள் வருகையால் ஒரு சில இடங்களில் சில ,சில சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது. 

கரூரில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசி; சில இடங்களில் மருந்து பற்றாக்குறை!

கரூரில் ஐந்து நாள்களுக்குப் பிறகு  தடுப்பூசி முகாம் இன்று முதல் செயல்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
TVK VIJAY : கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே திமுக முழு கவனம்.! பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே.? விளாசும் விஜய்
கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே திமுக முழு கவனம்.! இப்படி ஒரு ஆட்சி தேவையா.? விளாசும் விஜய்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
Embed widget