மேலும் அறிய

கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது ஏன்..? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பளிச் பதில்..

"மற்றவர்களை பற்றி பேசி எங்கள் நேரத்தை இனிமேல் நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை. ஒரு சிலரைத் தவிர வேறு யார் மீண்டும் வந்தாலும் அவர்களை கட்சியில் இணைத்து கொள்வோம்"

தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தால் அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை அதிமுக நிறைவேற்றும்"

சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "என்னை பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவை அதிமுக நிறைவேற்றும். 

மற்றவர்களை பற்றி பேசி எங்கள் நேரத்தை இனிமேல் நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை. ஒரு சிலரைத் தவிர வேறு யார் மீண்டும் வந்தாலும் அவர்களை கட்சியில் இணைத்து கொள்வோம். கட்சியை நேசிக்கும் நபர்கள், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நோக்கில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஒற்றைத் தலைமை என்று நினைக்கவில்லை. 

என்னைப் பொறுத்தவரை நான் சாதாரண தொண்டன்தான். திமுகவை எதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே. திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே லட்சியம். அதிமுக என்பது ஒன்றுதான். அதில், தெளிவான முடிவு வந்துவிட்டது. இனி, எந்த குழப்பமும் இல்லை. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து சபாநாயகரிடம் மீண்டும் மனு அளிப்போம்.

"எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்"

தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளோம். கர்நாடகாவில் எங்கள் அடையாளத்தை காட்ட ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். கர்நாடகாவில் வெற்றி பெறுவோம் என அங்குள்ள நிர்வாகிகள் கூறியதால் அங்கு போட்டியிடுகிறோம். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும். அதிமுக ஆட்சியில் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ந்தது.

திமுகவுக்கு கைப்பாவையாக செயல்படுகிறார் ஓபிஎஸ். அதிமுக தலைமையகம் புனிதமான இடம். யார் தவறாக நடந்தாலும் தண்டிக்கப்படுவர். அதிமுக அலுவலக கலவரம் விவகாரத்தில் ஓபிஎஸ் மூலம் திமுக ஒரு நாடகத்தை அரங்கேற்றியது. பொதுக்குழு நடந்தபோது அதில் பங்கேற்காமல் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்க்கு என்ன வேலை?" என்றார்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதையடுத்து, இரட்டை இலை சின்னம் அவர் வசமானது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ”தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநில கட்சியாக உள்ள அதிமுகவிற்கு குறிப்பிட்ட பகுதிகளில் தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க அதிமுக சார்பில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று அதிமுக சார்பில் கர்நாடாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் அறிக்கை அதிமுக பொதுச்செயலாளருக்கும் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget