![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CM Stalin: 'கனமழையால் தென் மாவட்டங்கள் பாதிப்பு’ - மீட்பு பணிக்கு வருமாறு தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும்
![CM Stalin: 'கனமழையால் தென் மாவட்டங்கள் பாதிப்பு’ - மீட்பு பணிக்கு வருமாறு தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு cm mk stalin invited to party comrades rain-affected districts to immediately help the public on the ground CM Stalin: 'கனமழையால் தென் மாவட்டங்கள் பாதிப்பு’ - மீட்பு பணிக்கு வருமாறு தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/18/54fff6951ffa3cfe36e122e993ed2c931702877311283572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு உதவுமாறு திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல் அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) December 18, 2023
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள்,… pic.twitter.com/FIvNhf52ce
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல், அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் - நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன்” என கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)