TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில், இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வானிலை முன்னறிவிப்புக்கு TN ALERT என்னும் செயலி தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மழைப் பொழிவு, பெய்யும் மழையின் அளவு, ஏரியின் நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை இதன்மூலம் அறிய முடியும். TN SMART மூலம் தகவல் பெறப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம்
வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
’வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் ஓரணியில் நின்று பணியாற்ற வேண்டும். கடந்த ஆண்டுகளில் அவ்வாறு பணியாற்றியதாலேயே சீர்கேடுகள் தடுக்கப்பட்டன’ என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்நேர வெள்ள முன்னெச்சரிக்கை ஆமைப்பு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. மாறிவரும் காலநிலை மாற்றத்தால், புவியின் தட்ப வெப்பமும் வானிலையும், பொது மக்களால் கணிக்கவே முடியாத நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.