மேலும் அறிய

Chief Minister Stalin: திருப்பத்தூர் சாலைவிபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

திருப்பத்தூரில் உயிரிழத மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளர். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்கள் உயிரிழப்பு:

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரிசமுத்திரம் அரசுப் பள்ளிக்கு இன்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த வளையாம்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ரபிக், த/பெ.சாமுவேல் (வயது 13),  விஜய், த/பெ.ராஜி (வயது12), மற்றும் சூர்யா, த/பெ.ராஜி (வயது 10) ஆகிய மூன்று மாணவர்கள் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி மூவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

நிதியுதவி அறிவிப்பு:

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

சாலை விபத்து: நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த விஜய்,(8 ஆம் வகுப்பு), சூர்யா (7ஆம் வகுப்பு)  அண்ணன் தம்பிகளான இவர்கள், அதே பகுதியை சேர்ந்த ரபீக் (8 ஆம் வகுப்பு) மாணவருடன் ஒன்றாக கிரிசமுத்திரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்கள் 3 பேரும் தினந்தோறும் பள்ளிக்கு  சைக்கிளில் சென்று வருவார்கள். இன்று இவர்கள் மூவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று  கொண்டிருந்தனர். அப்பொழுது வேலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் 8 மாணவர்கள் பெங்களூர் பதிவென் கொண்ட காரில்,  ஏலகிரியை  நோக்கி வேகமாக சென்றனர்.

அப்போது கார்  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் குறுக்கு நெடுக்குமாக காரானது ஓடியது. அதில்  சாலையோரம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது மோதி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் கார் மோதியதில் மாணவர்கள் மூன்று பேரும்  தூக்கிவீசப்பட்டனர்.

அப்போது நெடுஞ்சாலையில் இருந்த பொதுமக்கள் இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடிச்சென்று பள்ளி மாணவர்களை காப்பற்ற முயன்றனர். மாணவர்கள் மூவரும் தூக்கி வீசப்பட்டதில் மாணவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்த 8 மாணவர்களும் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினர். உடனடியாக விபத்து குறித்து அறிந்த வலியாம்பட்டு, கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பெற்றோர்கள் உயிரிழந்த மாணவர்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

அதன் பிறகு  மாணவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  இவ்விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்களிடையே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனிடையே திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் , வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த மாணவர்களின் உடலை பார்வையிட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget