மேலும் அறிய

தடுப்பூசியில் பழிவாங்கும் மத்திய அரசு: டாக்டர் ரவீந்திரநாத் குற்றச்சாட்டு

தடுப்பூசி வழங்குவதில் கூட மாநிலங்களை பழிவாங்குகிறது மத்திய அரசு என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் மத்திய அரசு மீது கடும் புகார் ஒன்றை முன்வைத்துள்ளார்.

 இதுகுறித்து அவர் ABPநாடு டிஜிட்டலுக்கு அவர் அளித்திருக்கும் சிறப்பு பேட்டி: 

‛‛கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் கூட, கொரோனா தடுப்பு மருந்துகளையும் தடுப்பூசிகளையும் மாநிலங்களுக்கு வழங்குவதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. எல்லாவிதமான அதிகாரத்தையும் மத்திய அரசே வைத்துக்கொண்டு இதில் கூட மாநிலங்கள் சுயமாக செயல்படாமல் தடுக்கிறது. சில மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் தரக் கூட மறுக்கின்றார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், கேரளா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை போதிய அளவு தராமல் பழிவாங்கும் படலத்தை மத்திய அரசு நடத்திக்கொண்டிருக்கிறது.


தடுப்பூசியில் பழிவாங்கும் மத்திய அரசு: டாக்டர் ரவீந்திரநாத் குற்றச்சாட்டு

நாளை திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்தாலும் அவர்களும் இந்த பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். எனவே, மாநிலங்களே சுதந்திரமாக கொரோனா தடுப்பூசிகளையும் தடுப்பு மருந்துகளையும் கொள்முதல் செய்துகொள்ள மத்திய அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல், மாநில அரசுகளே தடுப்பூசிகளை உற்பத்தி செய்துகொள்ளவும் வழிவகை செய்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும். தடுப்பூசி தட்டுப்பாடுகளை நீக்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு கோவாக்சின் தயாரிக்க அனுமதி தரவேண்டும்'. என்று கூறினார். 

நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் தற்போது ஆக்சிஜன் தான் அத்யாவசிய தேவையாக மாறியுள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. டெல்லிக்கு அனுப்பப்பட வேண்டிய ஆக்சிஜென் சிலிண்டர்கள் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் கூறினார். அதேபோல கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய அரசிடம் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கேட்டதாகவும். இதுவரை மத்திய அரசிடமிருந்து 60 லட்சத்து 84 ஆயிரத்து 360 டோஸ்களை கேரளா அரசு பெற்றுள்ளது என்றும் கூறினார். அதேபோல மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டதில் 56 லட்சத்து 75 ஆயிரத்து 138 டோஸ்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


தடுப்பூசியில் பழிவாங்கும் மத்திய அரசு: டாக்டர் ரவீந்திரநாத் குற்றச்சாட்டு

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை முன்பை விட அதிதீவிரமாக பரவி வருகின்றது. தடுப்பூசி கண்டறியப்பட்டு வழங்கப்பட்டு வந்தாலும் கூட தொடர்ந்து கொரோனாவின் வேகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் அதிகபடச்சமாக 3304 பேருக்கு தொற்று புதிதாக தொற்று பதிவானது. சென்னையில் 16 பேர் உள்பட தமிழகம் முழுவதும் 42 பேர் கொரோனாவால் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget