மேலும் அறிய

வழிமறித்த காட்டு யானை... ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை... அந்தியூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

ஒற்றை காட்டு யானை சாலையில் நின்று, ஆம்புலன்ஸ் வெளிச்சத்தை கவனித்த படி விலகாமல் நின்றது.அப்பெண்ணுக்கு பிரசவவலி அதிகமாகி ஆபத்தான நிலை ஏற்பட்டதால், ஆம்புலன்ஸில் பிரசவம் நடந்தது.

ஆம்புலன்ஸில் பிரசவிக்கும் நெகிழ்ச்சியான சம்பவங்கள் அவ்வபோது நிகழ்வது வழக்கம். அதுவும் மேல் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் இருக்கும் மருத்துவ உதவியாளர் உதவியுடன் பிரசவம் நடந்தது ஆச்சர்யப்பட செய்துள்ளது. யானை குறுக்கே நின்று வழியை மறைத்ததால் தாமதமாகி, சரியான நேரத்திற்கு மருத்துவமனை செல்ல முடியாமல் போயிருக்கிறது. அதனால் நடு வழியிலேயே பிரசவம் பார்த்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் அந்த பகுதியினரை நெகிழ செய்துள்ளது. அந்தியூரில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து தாய் சேயை காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வழிமறித்த காட்டு யானை... ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை... அந்தியூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

அந்தியூர் அருகே வனப் பாதையில் யானை மறித்த நிலையில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் மேலும் முன்னேறி செல்ல முடியாமல் தடை பட்டு நின்றது. அதனால் ஆம்புலன்ஸிலேயே அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா மலைப் பகுதி ஓசூரைச் சேர்ந்தவர் 25 வயதாகும் நந்தினி. இவரது குடும்பத்தார் கூலி வேலை செய்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டு, ஓசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக இரவு 11:30 மணிக்கு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கிளம்பினர். மணியாச்சிப்பள்ளம்வனப் பாதையில், இரவு 11:50 மணிக்கு ஒற்றை காட்டு யானை சாலையில் நின்று, ஆம்புலன்ஸ் வெளிச்சத்தை கவனித்த படி விலகாமல் நின்றது.அப்பெண்ணுக்கு பிரசவவலி அதிகமாகி ஆபத்தான நிலை ஏற்பட்டதால், ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் முதலுதவியை துவங்கினார். அதற்குள் யானை காட்டுக்குள் சென்று விட்டது.

வழிமறித்த காட்டு யானை... ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை... அந்தியூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

யானை விலகி சென்றாலும், சீக்கிரமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாததாலும், கிட்டத்தட்ட பிரசவ நிலையை நெருங்கியதாலும் நந்தினிக்கு வேறு வழி இன்றி அங்கேயே பிரசவம் பார்க்க தீர்மானித்தனர். மருத்துவ உதவியாளர் உதவியால், சரியாக இரவு 12:12 மணிக்கு அப்பெண், ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து வந்து தொடர் சிகிச்சை வழங்கினர். தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு, பாதி வழியிலேயே பிரசவ வலி எடுத்ததால், மருத்துவ உதவியாளர் அவருக்குப் பிரசவம் பார்த்த சம்பவம், அந்தப் பெண்ணின் உறவினர்களை நெகிழ வைத்திருக்கிறது. அதோடு, அவசர காலத்தில் பதற்றம் அடையாமல் தங்கள் வேலையை சிறப்பாக செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரையும், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளரையும் மருத்துவமனையில் இருந்தவர்கள் பாராட்டினர்.

தலைப்பு செய்திகள்

TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்.. வந்தது புதிய விதி!
திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம்.. வந்தது புதிய விதி!
Kanchipuram New Bus Stand: காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: விலகியது தடை! விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: விலகியது தடை! விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget