மேலும் அறிய

Anbumani Ramadoss: விவசாயிகளுக்கு குண்டர் சட்டமா? மனசாட்சி இருக்கிறதா? - அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!

விளை நிலங்களை அழித்து தொழிற்சாலைகள் வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss: விளை நிலங்களை அழித்து தொழிற்சாலைகள் வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

அன்புமணி ராமதாஸ் போராட்டம்:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாகத்திற்கு 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் அரசு மற்றும் விவசாய நிலம் அடங்கும்.  இதனால், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 120 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதை அடுத்து, போராட்டம் நடத்திய 20  பேரை போலீசார் அதிரடியாக கைது செய்னதர். பின்னர், கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கடும் எதிர்ப்பை கிளப்பியது. அதோடு, இந்த வழக்கில் கைதாகி குண்டர் சட்டம் பாய்ந்த 19 நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில்,  விவசாய நிலங்கள் பறிப்பதை கைவிடக்கோரி பட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மேல்மா கூட்டு சாலையில் இன்று போராட்டம் நடைபெற்றது. 

"விளைநிலங்களை அழித்து தொழில்சாலைகள் வேண்டாம்”

இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், ”சிப்காட் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தமிழக அரசு கைது செய்ததை பாமக கண்டிக்கிறது. திருவண்ணமாலை தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இங்கு தொழில்வளம், வேலைவாய்ப்பு என அனைத்தும் தேவைப்படுகிறது.  ஆனால், விளை நிலங்களை அழித்து திமுக அரசு தொழிற்சாலைகள் அமைக்கிறது. அப்படி, விளைநிலங்களை அழித்து தொழில்சாலைகள் எங்களுக்கு வேண்டாம். இது உண்மையான வளர்ச்சி கிடையாது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் இருக்கின்றது. அங்கு நீங்கள் சிப்காட்டை தொடங்குகள். யாரும் தடுக்கமாட்டார்கள். ஆனால், விவசாய நிலத்தை அழித்து தான் சிப்காட் தொடங்குவோம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு எதிராக பாமக தொடர்ந்து போராட்டம் நடத்தும்” என்றார்.

அன்னூருக்கு ஒரு நியாயம்? செய்யாறுக்கு ஒரு நியாயமா?

தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் விவசாயி நிலங்கள் பெரிதும் குறைந்துள்ளது.  இந்த நிலை தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காது. தேர்தல் அறிக்கையில் விவசாய நிலங்களை கையகப்படுத்த  மாட்டோம் என்று திமுக கூறியது. ஆனால், அதற்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.  இதைபோன்று தான் அன்னூர் சிப்காட் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அன்னூருக்கு ஒரு நியாயம்? செய்யாறுக்கு ஒரு நியாயமா?. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த அரசுக்கு மனசாட்சி இருக்கிறதா? எனவே, விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய வேண்டும். அரசு நிலத்தில் சிப்காட்டை தொடங்குவோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.  அதுவரை பாமக தொடர்ந்து போராட்டத்தை நடத்தும்.

விவசாயிகளுக்கு மரியாதையும், மதிப்பும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விளை நிலங்களை அரசு அழித்து வருகிறது. இதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். இது பாமக கட்சியின் பிரச்னை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சி பிரச்னை" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
Embed widget