மேலும் அறிய

குழந்தைங்க பசியால் வாடுது.. எங்கள விட்டுடாதீங்க.. ரேஷன் கார்டு இல்லாமல் தவிக்கும் இருளர் பழங்குடியினர்.

பல தலைமுறையாக காட்டுப்பகுதிகளை  வாழ்விடமாக கொண்ட  வேட்டையாடி பிழைப்பு நடத்திவந்த பழங்குடி இருளர் மக்கள், வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட  ஊரோத்தில் குடிசை அமைத்து , பாம்பு எலி பிடிக்கும் வேலைகளில் ஈடுபட்டனர்.         

பல தலைமுறையாக காட்டுப்பகுதிகளை  வாழ்விடமாக கொண்டு,  வேட்டையாடி பிழைப்பு நடத்திவந்த பழங்குடி இருளர் மக்கள், வேட்டையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டபோது ஊர் ஓரத்தில் குடிசையமைத்து, பாம்பு எலி பிடிக்கும் வேலைகளில் ஈடுப்பட்டனர். இதில் போதிய வருமானம் கிடைக்காது என்பதால், இன்று வரை பல பழங்குடி இருளர்கள்  கொத்தடிமைகளாக செங்கல் சூளை, ரைஸ் மில், மரம்வெட்டும் தொழில், ஆடு மாடு மேய்த்தல் மற்றும் விவசாய நிலங்களில் இரவுக் காவலர்களாக பயன்படுத்தப்படுகின்றனர் .      

குழந்தைங்க பசியால் வாடுது.. எங்கள விட்டுடாதீங்க.. ரேஷன் கார்டு இல்லாமல் தவிக்கும் இருளர் பழங்குடியினர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 427  இனப்பிரிவு மக்கள் விழுவதாக ஒரு கணக்கெடுப்பு உள்ளது. இருளர் உள்ளிட்ட பழங்குடியினர் 36 பிரிவுகளாகவும், தாழ்த்தப்பட்டோர் 76 பிரிவுகளாகவும் உள்ளனர். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ் நாட்டில் பழங்குடி இருளர் இன மக்கள் மொத்தம் 1,89,661 பேர் வாழ்ந்து வருகின்றனர். இதில் 10  சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு, சாதிச் சான்று , குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த அரசு சான்றிதழ்களும் இல்லாமல் தங்குவதற்கு சொந்த வீடுகள் இன்றி , ஆற்றங்கரை ஓரம், ஊர்களை ஒட்டிய காட்டுப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இன்று வரை பல்வேறு சாதி ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்

குழந்தைங்க பசியால் வாடுது.. எங்கள விட்டுடாதீங்க.. ரேஷன் கார்டு இல்லாமல் தவிக்கும் இருளர் பழங்குடியினர்.

 திண்டிவனம் பகுதியை சேர்ந்த எழுத்தாளர் முருகப்பன் ராமசாமியை தொடர்புகொண்டபோது “கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சென்ற ஆண்டு முதல்  உலகின் பொருளாதாரம் தொடங்கி, மனித உயிர் இழப்புக்கள் வரை பல்வேறு பாதிப்புகள் அடைந்துள்ள நிலையில், தமிழ் நாட்டில் கல்வியிலும், பொருளாதாரத்திலும்  மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள பழங்குடி இருளர் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் தொலைத்துள்ளனர் .     

 குடும்ப அட்டை இல்லாத காரணத்தால்  தமிழக அரசு அறிவித்துள்ள 4000  கொரோனா உதவி தொகை மற்றும் வேறு பல சலுகைகள் முழுமையாக தங்களுக்கு கிடைக்காதோ என்ற அச்சத்தில் உள்ளனர் பழங்குடி இருளர் மக்கள் என்று கூறினார்   ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த  சங்கர், (50) என்ற பழங்குடி இருளரிடம் பேசிய போது , எனக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவியும், 9  பிள்ளைகளும் உள்ளனர். என்னைப்போன்ற இன்னும் 4  இருளர் குடும்பங்கள் திண்டிவனம் - மேல்மருவத்தூர் நடுவே அமைந்திருக்கும் ஒலக்கூர் கிராம ஏறி கரை ஓரம் கோட்டை அமைத்து தங்கிவருகிறோம். தினக்கூலிகளான நாங்கள்  , மரம்வெட்டும் தொழில் மற்றும் மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்று வருகிறோம் .    

குழந்தைங்க பசியால் வாடுது.. எங்கள விட்டுடாதீங்க.. ரேஷன் கார்டு இல்லாமல் தவிக்கும் இருளர் பழங்குடியினர்.

சென்ற ஆண்டு கொரோனா தொடங்கிய காலம் முதல், வேலைவாய்ப்பு எதுவும் இல்லாமல் வறுமையில் வாழ்கின்றனர் . எங்களை போல அதிக இருளர் இன மக்கள் குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த அரசு சான்று இல்லாததால், அரசு வழங்கும் இலவச அரிசி கூட பெற முடியாமல், பட்டினியில் வாழ்ந்து வருகிறோம். எனவே அரசு எங்களுக்கு தகுந்த உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

குழந்தைங்க பசியால் வாடுது.. எங்கள விட்டுடாதீங்க.. ரேஷன் கார்டு இல்லாமல் தவிக்கும் இருளர் பழங்குடியினர்.

பழங்குடி இருளர் மக்களுக்கு கடந்த 30  ஆண்டுகளாக பணியாற்றி வரும் பேராசிரியர் பிரபா கல்விமணியை தொடர்புகொண்டபோது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கி இருக்கும் பழங்குடி இருளர் மக்கள் , சமீப காலங்களில்தான் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு உதவியாலும் கொத்தடிமை முறையில் இருந்து மீண்டு வருகின்றனர் .     பெரும்பான்மையானவர்களுக்கு இன்னும் சாதி சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் குழந்தைகள் கல்வி முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது .   

குழந்தைங்க பசியால் வாடுது.. எங்கள விட்டுடாதீங்க.. ரேஷன் கார்டு இல்லாமல் தவிக்கும் இருளர் பழங்குடியினர்.

மேலும்  குடும்ப அட்டையை மையமாக கொண்டு அரசு வழங்கும் சலுகைகள் இவர்களுக்கு சில தளர்வுகள் ஏற்படுத்தி , கிராம நிர்வாக அலுவலர் , பஞ்சாயத்து உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் கொண்டு  கணக்கிட்டு உரிய விவரங்களை முழுமையாக கொண்டு சேர்க்கமுடியும் என்று கூறினார் .   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget