Annamalai On Punjab Attack: பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதலா? அண்ணாமலை இரங்கல் செய்தியால் குழப்பம்..
பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டு, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டு, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் மறுப்பையும் மீறி, அந்த தாக்குதலை இவர் பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு:
நாட்டின் மிக பெரிய ராணுவ முகாமான பதிண்டா ராணுவ முகாம், சண்டிகர்-ஃபாசில்கா பாதையில் தேசிய நெடுஞ்சாலை 7-இல் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த முகாமில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து, ராணுவ முகாம் அதிரடிப்படையினரால் முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, ராணுவ முகாமில் 4 வீரர்கள் இறந்து துப்பாக்குஇ குண்டுகள் துளைத்து உயிரிழந்து கிடந்தனர். அவர்கள் அனைவரும் பீரங்கிப் படையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 தமிழக வீரர்கள் வீரமரணம்:
இந்நிலையில், உயிரிழந்த வீரர்கள் யார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உயிரிழந்த 4 பேரில் இருவர் தமிழகத்தை சேர்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் பனங்காடு பகுதியை சேர்ந்த கமலேஷ் எனவும், மற்றொருவர் தேனி மாவட்டம் மூணாண்டிபட்டி பகுதியை சேர்ந்த லோகேஷ்குமார் என்பதும் தெரிய வந்துள்ளது.
”பயங்கரவாத தாக்குதல் கிடையாது”
”பதண்டா ராணுவ முகாமில் தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. ராணுவ முகாமில் இருந்த வீரர், சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 4 வீரர்கள் உயிரிழந்தனர். 2 நாட்களுக்கு முன்பு ராணுவ முகாமில் ஒரு இன்சாஸ் துப்பாக்கி, 28 குண்டுகள் மாயமாகின. அதற்கும், இச்சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இதன் பின்னணியில் ராணுவ வீரர்கள் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது” என பஞ்சாப் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை இரங்கல்:
இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பஞ்சாப் மாநிலம் பதிண்டா இராணுவ முகாமில் நேற்று நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்களான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு கமலேஷ் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு யோகேஷ் குமார் ஆகியோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மற்றும் அவர்களோடு வீரமரணம் அடைந்த இரண்டு ராணுவ வீரர்கள் ஆகியோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வீர வணக்கம்!” என குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சை ட்வீட்:
பதிண்டா ராணுவ முகாமில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் கிடையாது என, பஞ்சாப் காவல்துறை ஏற்கனவே விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், அந்த சம்பவத்தை ம்த்தியில் ஆளும் பாஜகவை சேர்ந்த ஒரு மாநிலத்தின் தலைவரான அண்ணாமலையே பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets