மேலும் அறிய

கரூரில் காணாமல் போன 9 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பண்ணப்பட்டி அடுத்த சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் இவர் கூலி தொழிலாளி இவருக்கு  இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இளைய மகனான அழகு ராஜா (9) .  கொரோனா  நோய் தொற்று பரவல் காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் அழகுராஜா தனது நண்பர்களுடன் விளையாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த 09 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டில் முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மதிய வேளையில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அழகுராஜா அனைவரும் மதிய உணவு மேற்கொண்டு வரலாமென விளையாட்டை பாதியில் நிறுத்திவிட்டு அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.


கரூரில் காணாமல் போன 9 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

இந்த நிலையில் அழகுராஜா அப்போது எங்கு சென்றார், என்று தெரியவில்லை. மீண்டும் மாலை 5 அழகு ராஜாவின் தந்தை காளியப்பன் மற்றும் அவரது தாயார் தங்களது நாள்தோறும் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது மூத்த மகன் வீரக்குமார் இடம் தம்பியைப் பற்றி கேட்டுள்ளனர். அவன் விளையாடிக் கொண்டிருப்பான் அப்பா என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டதாக தெரிகிறது. இரவு நேரம் நெருங்க நெருங்க அவன் வீட்டிற்கு வரவில்லை.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

இதனால் சந்தேகமடைந்த அழகு ராஜாவின் தந்தை காளியப்பன் அக்கம், பக்கம் முழுவதும் தேடி உள்ளார். அதை தொடர்ந்து அவரது தாயார், அழகு ராஜாவின் அண்ணன் மற்றும் சகோதரி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு தெரிந்த உறவினர் வீட்டில் சென்று பார்த்துள்ளனர். எங்கும் அவன் கிடைக்காததால் அருகிலிருந்த தோகைமலை போலீசாருக்கு இதைப் பற்றி புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். புகாரை பெற்று கொண்ட போலீசார் காணவில்லை என்ற அறிவிப்பை வெளியிடுகின்றனர். அந்த அறிவிப்பில் பெயர் அழகுராஜா வயது 9 , சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவன் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வெளியிடுகின்றன. மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் என்ற இரண்டு அலைபேசி எண்ணையும் வெளியிட்ட பின்னர் அதனை சமூக வலைதளங்களில் பரவியது.


கரூரில் காணாமல் போன 9 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

இந்நிலையில் மறுநாள் 10ஆம் தேதி காலை முதல் அழகு ராஜாவின் தந்தை காளியப்பன் அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் அழகுராஜாவில் தேட தொடங்கினர். எந்தத் துப்பும் கிடைக்காததால் அவர்கள் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் அன்று இரவு 7 மணி அளவில் சுக்காம்பட்டியில் இருந்து ரங்காபுரம் செல்லும் சாலையில் உள்ள ஆறுமுகம் என்பவர் கிணற்றுக்கு எதிர்புறம் உள்ள ரோட்டில் மேற்குப்புறம் பகுதியைச் சேர்ந்த அழகுராஜா தான் அணிந்திருந்த ஆடைகள் முழுவதும்  நனைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை அப்பகுதி வழியாக சென்ற அதே ஊரை சேர்ந்த முருகேசன் மகன் முனியப்பன் பார்த்து விட்டு அருகில் இருந்த கண்ணாயிரம் என்பவரிடம் இதைப் பற்றி கூறியுள்ளார். அந்த கண்ணாயிரம் அழகு ராஜாவின் அண்ணன் வீரக்குமாருக்கு தகவல் தெரிவிக்க வீரக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். இறந்து கிடப்பது எனது தம்பி தான் என்று உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.


கரூரில் காணாமல் போன 9 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

பின்னர் அக்கம்,பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து தோகைமலை போலீசார் விரைந்து வந்து அழகு ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
மதுரை காந்தி அருங்காட்சியகம்: விரைவில் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரை காந்தி அருங்காட்சியகம்: விரைவில் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget