மேலும் அறிய

கரூரில் காணாமல் போன 9 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பண்ணப்பட்டி அடுத்த சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் இவர் கூலி தொழிலாளி இவருக்கு  இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இளைய மகனான அழகு ராஜா (9) .  கொரோனா  நோய் தொற்று பரவல் காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் அழகுராஜா தனது நண்பர்களுடன் விளையாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த 09 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டில் முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மதிய வேளையில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அழகுராஜா அனைவரும் மதிய உணவு மேற்கொண்டு வரலாமென விளையாட்டை பாதியில் நிறுத்திவிட்டு அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.


கரூரில் காணாமல் போன 9 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

இந்த நிலையில் அழகுராஜா அப்போது எங்கு சென்றார், என்று தெரியவில்லை. மீண்டும் மாலை 5 அழகு ராஜாவின் தந்தை காளியப்பன் மற்றும் அவரது தாயார் தங்களது நாள்தோறும் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது மூத்த மகன் வீரக்குமார் இடம் தம்பியைப் பற்றி கேட்டுள்ளனர். அவன் விளையாடிக் கொண்டிருப்பான் அப்பா என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டதாக தெரிகிறது. இரவு நேரம் நெருங்க நெருங்க அவன் வீட்டிற்கு வரவில்லை.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

இதனால் சந்தேகமடைந்த அழகு ராஜாவின் தந்தை காளியப்பன் அக்கம், பக்கம் முழுவதும் தேடி உள்ளார். அதை தொடர்ந்து அவரது தாயார், அழகு ராஜாவின் அண்ணன் மற்றும் சகோதரி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு தெரிந்த உறவினர் வீட்டில் சென்று பார்த்துள்ளனர். எங்கும் அவன் கிடைக்காததால் அருகிலிருந்த தோகைமலை போலீசாருக்கு இதைப் பற்றி புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். புகாரை பெற்று கொண்ட போலீசார் காணவில்லை என்ற அறிவிப்பை வெளியிடுகின்றனர். அந்த அறிவிப்பில் பெயர் அழகுராஜா வயது 9 , சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவன் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வெளியிடுகின்றன. மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் என்ற இரண்டு அலைபேசி எண்ணையும் வெளியிட்ட பின்னர் அதனை சமூக வலைதளங்களில் பரவியது.


கரூரில் காணாமல் போன 9 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

இந்நிலையில் மறுநாள் 10ஆம் தேதி காலை முதல் அழகு ராஜாவின் தந்தை காளியப்பன் அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் அழகுராஜாவில் தேட தொடங்கினர். எந்தத் துப்பும் கிடைக்காததால் அவர்கள் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் அன்று இரவு 7 மணி அளவில் சுக்காம்பட்டியில் இருந்து ரங்காபுரம் செல்லும் சாலையில் உள்ள ஆறுமுகம் என்பவர் கிணற்றுக்கு எதிர்புறம் உள்ள ரோட்டில் மேற்குப்புறம் பகுதியைச் சேர்ந்த அழகுராஜா தான் அணிந்திருந்த ஆடைகள் முழுவதும்  நனைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை அப்பகுதி வழியாக சென்ற அதே ஊரை சேர்ந்த முருகேசன் மகன் முனியப்பன் பார்த்து விட்டு அருகில் இருந்த கண்ணாயிரம் என்பவரிடம் இதைப் பற்றி கூறியுள்ளார். அந்த கண்ணாயிரம் அழகு ராஜாவின் அண்ணன் வீரக்குமாருக்கு தகவல் தெரிவிக்க வீரக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். இறந்து கிடப்பது எனது தம்பி தான் என்று உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.


கரூரில் காணாமல் போன 9 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

பின்னர் அக்கம்,பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து தோகைமலை போலீசார் விரைந்து வந்து அழகு ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget