மேலும் அறிய

MetturDam: மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு! ஒகேனக்கல்லில் மீண்டும் உற்சாகம்!

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,500 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து நேற்று  வினாடிக்கு 19,760 கனஅடியாக குறைந்தது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்குமேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

8 நாளுக்கு பின் நீர்மட்டம் சரிவு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து காரணமாக கடந்த 5ஆம் தேதி நடப்பு ஆண்டி 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. தற்போது மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பும் பயணம் தொடங்கியது.

நேற்று முன்தினம் இரவு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,500 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து நேற்று  வினாடிக்கு 19,760 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்குமேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.85 அடியாகவும் நீர் இருப்பு 93. 23 டி.எம்.சி.யாக உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக குறைந்தது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,000 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் ஆற்றில் *குளிக்க மட்டும்* 20-வது நாளாக தடை தொடர்கிறது.

 கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடக அணைகளில் காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டதால் கடந்த 25 நாட்களாக பரிசல் இயக்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீர்வரத்து குறைந்துள்ளதால் மீண்டும் பரிசல் பயணம் தொடங்கியது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 25 நாட்களாக உபநீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 88 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு நேரிட்டதால் மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருத்தில் கொண்டு மெயின் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் பரிசல் சவாரி மேற்கொள்ளவும் 18 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து, நேற்று வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி மட்டுமே நீர் வரத்து இருந்தது. இதனைத்தொடர்ந்து ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. எனவே, மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க மட்டும் 18 நாட்கள் கழித்து அனுமதி வழங்கியது. மாவட்ட ஆட்சியர் சதீஷ், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான மணி ஆகியோர் ஒகேனக்கல்லில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மலர் தூவி படகு சவாரியை மீண்டும் தொடங்கி வைத்தனர். பின்னர் அங்கிருந்த பரிசல் ஓட்டிகள், பொதுமக்கள், மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Embed widget