மேலும் அறிய

தருமபுரியில் முக்கிய சாலையில் குப்பைகளை கொட்டி அசுத்தம் - நோய் தொற்று பரவும் அபாயம்

தருமபுரி எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க செல்லும் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் முகம் சுழித்து வருகின்றனர்.

தருமபுரி எஸ்பி உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலையில் குப்பைகளை கொட்டி, சுத்தம் செய்யாததால், சாலையில் சிதறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சியில் தான்,  மாவட்டத்தின் முக்கிய அலுவலகங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம், தீயணைப்பு துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம், நெடுஞ்சாலை பொறியாளர் அலுவலகம்  உள்ளிட்டவைகள் உள்ளது. இந்த அலுவலகங்கள் அனைத்தும் சேலம் தருமபுரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும், தருமபுரி மாவட்டத்திலிருந்து மக்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க தினந்தோறும் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். 
 

தருமபுரியில் முக்கிய சாலையில் குப்பைகளை கொட்டி அசுத்தம் - நோய் தொற்று பரவும் அபாயம்
 
இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அலுவலகத்திற்கு எதிரே தினம் தோறும் அப்பகுதியில் உள்ள மக்கள் குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால் தினமும் தூய்மை பணியாளர்கள் சுத்து செய்து வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள், இதனை சுத்தம் செய்ய வருவதில்லை. இதனால் குப்பைகள் தேங்கி, குப்பை தொட்டி முழுவதும் நிரம்பியுள்ளது. இதனால் குப்பைகள் சாலையில் சிதறி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
 

தருமபுரியில் முக்கிய சாலையில் குப்பைகளை கொட்டி அசுத்தம் - நோய் தொற்று பரவும் அபாயம்
 
மேலும், தருமபுரி எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க செல்லும் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் முகம் சுழித்து வருகின்றனர். மேலும், எஸ்பி அலுவலகத்திற்கு எதிரே உள்ள தனியார்களின் வணிக வளாகத்தில் இருந்து தினந்தோறும் வெளியேற்றப்படும் கழிவுநீர், எஸ்பி அலுவலகத்திற்கு முன் உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக சென்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் கட்டிடத்தை ஒட்டி தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை இலக்கியம்பட்டி ஊராட்சியில் நுகர் பொருள் வாணிப கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்றியும்,  அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் தேங்கி நிற்காமல் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மேலும் இதுகுறித்து மாவட்ட திட்ட அலுவலர் பாபுவிடம் கேட்டபோது, இதுகுறித்த புகார் எதுவும் எங்களுக்கு யாரும் தெரிவிக்கவில்லை. தற்போது உடனடியாக தூய்மை பணியாளர்களை அனுப்பி, குப்பைகளை  அப்புறப்படுத்தி, அந்த இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்படும். மேலும் இந்த பகுதியில் இனி தினமும் தவறாமல், தூய்மை பணியாளர்கள் சுத்தும் செய்வார்கள் என தெரிவித்தார்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget