"செங்கோட்டையன் உடலில் அதிமுக இரத்தம்! தொண்டர்கள் ஒன்றுபட அழைப்பு.."சசிகலா பரபர அறிக்கை
அதிமுக எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார்.

செங்கோட்டையனின் உடலில் ஓடுவது உண்மையான இரத்தம் என்று நிரூபித்துள்ளார் என்றும் அவரே உண்மையான அதிமுக தொண்டர் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் சவால்:
பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்து அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியனது. இந்த நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார், அதில் முக்கியமாக கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து அதிமுக வெற்றி பெறவில்லை என்றும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் தற்போது அதிமுகவின் வெற்றி தான் முக்கியம் என்று செங்கோட்டையன் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தது பரபரப்பை கிளப்பி இருந்தது.
சசிகலா அறிக்கை:
இந்த நிலையில் செங்கோட்டையனின் கருத்துக்கு சசிகலா ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆராம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம் இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்ததுபோல் "இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்.
செங்கோட்டையன் உடம்பில் அதிமுக இரத்தம்:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர் தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை நிரூபித்துள்ளார்.
ஆக்ஷனில் வெறித்தனம் கட்டும் சிவகார்த்திகேயன்...மதராஸி திரைப்பட விமர்சனம்
அனைவரும் இணைய வேண்டும்
கழகம் ஒன்றுபட வேண்டும் என செங்கோட்டையன் அவர்களின் கருந்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.
அன்பு சகோதரர் செங்கோட்டையன் அவர்களைப் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. திமுகளின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.
யாராலும் அதிமுக தடுக்க முடியாது
இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எனவே, திமுக என்ற தீயசக்தி நம்கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் நடைபோட்டு தடுத்தாலும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும். செறுக்கோடும் மிளிரும்.
ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்! நாளை நமதே ! வெற்றி நிச்சயம்! பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க! புரட்சித்தலைவர் நாமம் வாழ்க! புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க! நன்றி வணக்கம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.






















