மேலும் அறிய

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அது அதிபர் ஆட்சியை நோக்கி பயணிக்கும் திட்டம் - ஈஸ்வரன்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கட்சியின் பொதுச்செயலாளரும்,எம்.எல்.ஏ வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சியை நோக்கி செல்கின்றது என்றும், அண்ணாமலை சொல்வதை மிரட்டும் தொனியில் கூறுவதை எந்த ஒரு அரசியல் கட்சியினரும் ஏற்றுக்கொள்ள வகையில் அல்ல என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கரூரில் அதிரடி பேட்டியளித்துள்ளார்.

 


ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அது அதிபர் ஆட்சியை நோக்கி பயணிக்கும் திட்டம் - ஈஸ்வரன்

 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இக்கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்.ஏ வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு தொடங்கவில்லை. ஒரு சில ஊடகங்களில் வரும் செய்தியில் உண்மை கிடையாது. ஆகவே எங்கள் கட்சியின் பொதுக்குழு அதனை தீர்மானிக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அது அதிபர் ஆட்சியை நோக்கி பயணிக்கும் திட்டம், ஆகவே அது நம்முடைய நாட்டில் ஒத்துவராது.

 


ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அது அதிபர் ஆட்சியை நோக்கி பயணிக்கும் திட்டம் - ஈஸ்வரன்

 

 

அது இப்போதைக்கு நடைமுறை சாத்தியம் அல்ல. அதே போல, காவிரி விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றது. கடந்த 2014ம் ஆண்டே பாரத பிரதமர் தேர்தலின் வாக்குறுதியில், கங்கையும், காவிரியும் இணைக்கப்படும் என்று சொன்னார். ஆனால் இன்றுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. 2019 ல் கோதாவரியை கொண்டு வந்து இணைப்போம் என்று சொன்னார். ஆனால் அதுவும் இணைக்கப்படவில்லை, ஆகவே 2024ம் ஆண்டான இந்த வருட தேர்தலில் எதை இணைப்போம் என்று சொல்லப்போகின்றார்களோ? தெரியவில்லை, ஆகவே பாஜக தலைவர்கள் அதை பற்றி பேச மறுக்கின்றனர்” என்றார்.

 


ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அது அதிபர் ஆட்சியை நோக்கி பயணிக்கும் திட்டம் - ஈஸ்வரன்

 

 

தொடர்ந்து திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அடிக்கடி அண்ணாமலை கூறிவருவது குறித்து கேள்வி எழுப்பிய போது, ஊழல் செய்தவர்கள் விசாரணை வளையத்திற்குள் வரலாம், அதில் உண்மை இருந்தால் தண்டனையும் பெறலாம், அதில் எந்த வித மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால், உள்நோக்கத்துடனும், மிரட்டும் தொனியில் கூறிவருவது தான் யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவ்வப்போது உள்நோக்கத்துடன் மிரட்டுகின்ற தொனியில் எந்த ஒரு கட்சியினரும் பேசியது கிடையாது. ஆனால், அண்ணாமலை அப்படித்தான் தொடர்ந்து பேசி வருகின்றார் என்றார். மேலும், கள் இறக்குவது ஒன்று தான் விவசாயிகளின் வருமானத்தினை இரட்டிப்பாக்கும், ஆகவே கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றார். 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
Embed widget