மேலும் அறிய

ஆளுநர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று துரைமுருகன் சொல்ல முடியாது - ஆளுநர் தமிழிசை

ஆளுநர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அண்ணன் துரைமுருகன் சொல்ல முடியாது - ஆளுநர் தமிழிசை

தெலுங்கானா ஆளுநரும், புதுவையின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆண்டுவிழாவில் இன்று மாலை கலந்துக்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "சகோதரர் ரகுபதி சொன்ன பதிலில் மிக்க மகிழ்ச்சி. ஏனெனில், அவர் சொன்ன பதிலில், "நாம் மற்ற மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்லலாம். இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கே நாம் வாழ்த்து சொல்லிவிட்டோம் என்று சொன்னால், நமக்கே நாம் வாழ்த்து சொன்ன மாதிரி" என்று, 'இந்து' என்று அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்து மதத்திற்கு வாழ்த்துக்களே சொல்ல மாட்டேன் என சொல்லிக்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையை சேர்ந்த ஒருவரே, 'இல்லை நான் இந்துதான்' என பிரகடனத்தை செய்திருப்பது மிக்க மகிழ்ச்சி.

அதே நேரத்தில், நம்முடைய வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு நாம் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில்லையா... அது அம்மாவால் பிறந்த குழந்தைதான். அதற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னால், அது அம்மாவிற்கே சொன்ன மாதிரியா? ஏன் இந்த பாகுபாடு என்று கேட்கிறோம். வேறுபாடு பார்ப்பது திராவிடம் அல்ல என்று சொல்கிறார் அல்லவா; பிரித்து பார்ப்பவர்களால் திராவிடம் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது என சொல்கிறார்கள் அல்லவா... பிரித்து பார்ப்பதால் தானே நீங்கள் வாழ்த்துச்சொல்ல மறுக்கிறீர்கள். ஆனால், இன்று புதியதாக ஒரு வியாக்கியானம் சொல்லி இருக்கிறார்கள். 'இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கே நாம் சொல்லிக்கொண்டால், அது நமக்கே சொல்லிக்கொள்கிற மாதிரி' என்று. இது உலகத்திலியே இல்லாத ஒரு காரணமாக இருக்கிறது. இதில் சிரிக்க தவற வேறேதுமில்லை. ஆளுநர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அண்ணன் துரைமுருகன் சொல்ல முடியாது. அவருடைய பையன் கதிர்க்கு வேண்டுமானால் அறிவுறுத்தல் வழங்கலாம்.

ஆனால், ஆளுநருக்கு அப்படி அவர் அறிவுறுத்தல் வழங்க முடியாது. ஆளுநர் அவருடைய பணியினை செய்கிறார். அவருடைய கருத்தில் உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம். கருத்துக்கு கருத்தை வைத்து பதில் சொல்லலாம். அதற்காக, ராஜினாமா செய்ய வேண்டும் என்றெல்லாம் கடுமையாக  விமர்சனம் செய்வது சரியல்ல. அப்படியென்றால், நீங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது, ஆளுநரை சந்தித்து இருக்கவே கூடாது. அப்போது ஆளுநர் தேவையாக இருந்தார், இன்று தேவையில்லாமல் இருக்கிறார். அதனால், நீங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள். அவரவர்களுக்கு தனி கருத்திருக்கலாம். உங்களுடைய கருத்து, இல்லை அப்படி என்று சொல்லிவிட்டு போங்கள். அதற்காக இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்தீர்கள் என்று சொன்னால் பார்த்துக்கொள்ள வேண்டியது தான்" என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Embed widget