விவசாயிகளின் கனவுகளை மீட்டெடுக்கும் அதிமுக: எடப்பாடி பழனிசாமி கோவையில் சூறாவளி பிரசாரம்!
" கோவை மாவட்டத்தில் தனது 2026 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியுள்ளார்"

2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து தொடங்கினார்.
எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது: தமிழகம் முழுவதும் உள்ள 6000க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரபட்டது அதிமுக ஆட்சியில் மட்டும்தான்.நானும் ஒரு விவசாயி தான் தற்போதும் நான் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு பிள்ளையை தாய் எவ்வாறு பாதுகாக்கிறாரோ அதேபோல் தான் விவசாயிகள் பயிர்களை பாதுகாப்பர். சொட்டுநீர் பாசனம் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக தான். 25% மானியம் கொடுத்தும் மத்திய அரசிடம் நிதி பெற்று அந்தத் திட்டத்தை கொண்டு வந்தோம் என தெரிவித்தார்.
பசு ஆராய்ச்சி செய்ய மையம்
கால்நடை மருத்துவர் கல்லூரிகளே கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில்தான். அமரிக்கா பஃபலோ சென்று ஆய்வுசெய்து இங்கு வந்து பசு ஆராய்ச்சி செய்ய மையம் தொடங்கினோம். கலப்பின பசுவை உருவாக்கி, பால் உற்பத்தியை அதிகப்படுத்த முயற்சித்தோம். ஆடு, மீன், பன்றி, கோழி வளர்ப்பு எல்லாமே அங்கு மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது. விவசாயிகளை நேரடியாக அழைத்துச்சென்று பயிற்சி அளிக்க முயற்சித்தோம். ஆட்சி மாற்றத்தில் எல்லாம் கிடப்பில் போடப்பட்டது. பசுக்களை இலவசமாக விவசாயிகளுக்கு கொடுத்த ஆட்சி அதிமுக.
கால்நடைகளுக்கு நோய் வருவதற்கு முன்பாக அதற்கு நோய் வரக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எவ்வாறெல்லாம் செய்ய வேண்டும் என்றும் அது நோய்வாய் படுவதற்கு முன்பாக அதை கற்றுக்கொள்ள ஒரு மையம் அமைத்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியது அதிமுக ஆட்சியில்தான்.
மும்மனை மின்சாரம் இலவசமாக வழங்கியது அதிமுக ஆட்சிதான்.
வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தது அதிமுக ஆட்சி. வனவிலங்குகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் பாதிப்புகளை உடனடியாக அரசு அதிகாரிகளிடம் அறிவுரை கொடுத்து அது மதிப்பீட்டு செய்து அதன் இழப்பீட்டை நான் முதலமைச்சராக இருந்தபோதுதான். திமுக ஆட்சியில் நான்கு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது
அண்ணா திமுக ஆட்சியில் பசுமை வீடு கட்டி கொடுக்கப்பட்டன. அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தபோது பேச்சுவார்த்தை நடத்தி பேசி நீர் பிரச்சினை தீர்க்க வழி வகுத்தோம். தற்போது ஆட்சி மாற்றம் ஆன பிறகு அந்த பிரச்சினை குறித்து இந்த அரசு பேசவோ எந்த ஒரு நடவடிக்கையோ எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்தார்.
நீர் சுத்தகரிப்பு திட்டத்திற்காக 11500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2019ம் ஆண்டில் நான் முதலமைச்சராக இருந்தபோது பாரதப் பிரதமரை சந்தித்தேன் இந்த திட்டத்தின் செயல்முறைகளை நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தை விளக்கி அதற்கான நிதி ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக அரசாங்கம் என்பது மக்களுக்கான அரசாங்கம், விவசாயிகளுக்கான அரசாங்கம். இதில் மாற்றுக்கருத்து இல்லை. எப்போதும் நாங்கள் விவசாயிகள் உடன் மக்கள் உடன் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொண்டு விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் சூளை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவருக்கும் அதிமுக ஆட்சியிலே கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது தக்க நடவடிக்கை எடுத்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து தன்னுடைய ஊரை முடித்துக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.





















