மேலும் அறிய

பள்ளிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு, மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார் !

காலை உணவு திட்ட விரிவாக்கம் முறையாக மாணவர்களுக்கு போய் சேர்கின்றதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மதுரை மாநகராட்சி மற்றும் அரசு கள்ளர் பள்ளிகளில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.
 
காலை உணவுத் திட்டம்
 
’முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து, மதுரை மாநகராட்சி மற்றும் அரசு கள்ளர் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 15.09.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். 
 
மதுரையில் காலை உணவுத்திட்டம்
 
இத்திட்டத்தின் முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி 26 தொடக்கப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2686 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு மொத்தம் 73 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வரை பயிலும் மொத்தம் 7197 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மதுரை மாநகராட்சியின் பள்ளிகளில் மட்டும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் வழங்கும் பணியில் 126 தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மதுரை மாநகராட்சியின் சார்பில் மாதந்தோறும் ரூ.1500 மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
 
மதுரை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிட உத்தரவிட்டார்
 
இந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் மாணவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார், அமைச்சர் பழனிவேல் தியாகாரஜன்.  அப்போது அதே பள்ளியில் உயர்நிலை மற்றும் மேல் நிலை வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் உணவு அருந்தாமல் இருப்பதை கண்டார். ஒரு பள்ளி வளாகத்துக்குள் எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் உள்ள 28 பள்ளிகளில் 1350 மாணவர்களுக்கும், அதாவது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கிட மதுரை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிட உத்தரவிட்டார். அதன் படி முதற்கட்ட முயற்சியாக.  பல்வேறு தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் மூலம் கடந்த செப்டம்பர் 11, 2023 முதல் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார் அமைச்சர்
    
மேலவாசல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை விரிவாக ஆய்வு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதில் மாணவர்களின் வருகை பதிவேடு காலை உணவு திட்ட பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து மதுரை மாநகராட்சி கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்களுடன் பேசிய அவர் திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து முத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்த அமைச்சர் மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் காலை உணவு திட்ட பதிவேடு குறித்து ஆராய்ந்து மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் உடல்நலன்  குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். காலை உணவு திட்ட விரிவாக்கம் முறையாக மாணவர்களுக்கு போய் சேர்கின்றதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பாவை விளக்காய் ஒரு தாய்க்கிழவி... 112 வருடங்களாக ஒளி வீசும் ரகசியம் குறித்து தெரியுமா?
பாவை விளக்காய் ஒரு தாய்க்கிழவி... 112 வருடங்களாக ஒளி வீசும் ரகசியம் குறித்து தெரியுமா?
அதிமுக குறித்து யார் யார் என்ன சொன்னாலும் அதற்கு நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை - செல்லூர் ராஜு பேட்டி !
அதிமுக குறித்து யார் யார் என்ன சொன்னாலும் அதற்கு நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை - செல்லூர் ராஜு பேட்டி !
ஒரு பிரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம்.. என ஜெயராஜ் - பென்னிக்கிஸ் - கடுமையாக தாக்கியுள்ளனர் !
ஒரு பிரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம்.. என ஜெயராஜ் - பென்னிக்கிஸ் - கடுமையாக தாக்கியுள்ளனர் !
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு, அடுத்த கட்டம் என்ன? முழு விவரம் !
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு, அடுத்த கட்டம் என்ன? முழு விவரம் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கும் அந்த 8 தொகுதிகள் என்னென்ன.? இதோ உத்தேச பட்டியல்...
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
Thirumavalavan: ’’திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கத்துக்கு ஓகே சொன்னது ஏன்? 8 அல்ல 18’’- விசித்திர காரணம் சொன்ன விசிக திருமா!
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.! திருமாவளவன் - ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
DMK Candidate List: வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது திமுக - எங்கே? யாருக்கு வாய்ப்பு - முழு விவரம்
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
Panguni Uthiram 2026 Date: பங்குனி உத்திரம் மார்ச் 31ம் தேதியா? ஏப்ரல் 1ம் தேதியா? பங்குனி உத்திரம் எப்போது பக்தர்களே!
TASMAC Liquor Bottles : டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
டாஸ்மாக்கில் இனி பீர், மதுபானம் வாங்குவது கஷ்டம்.! ஒரு நபருக்கு இவ்வளவு தான்- வெளியான லிஸ்ட்
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
சி.வி.சண்முகம் மீது அடுக்கடுக்கான புகார்கள் - நகர செயலாளர் பசுபதி ராஜினாமா!
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Embed widget