மதுரை, கோவை மெட்ரோவுக்கு மீண்டும் மத்திய அரசு 'நோ': தமிழக வளர்ச்சிக்குத் தடை?
மதுரையில் தற்போது நிலவும் போக்குவரத்து சூழலை கருத்தில் கொண்டு மெட்ரோ திட்டம் அவசியம் தேவை என சமூக் ஆர்வலர்களும் கருதுகின்றனர்.

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட மத்திய அறிக்கையை, அரசு மீண்டும் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்கள் பார்க்கப்படுகிறது. குறிப்பாக கோவை தொழில்சார்ந்த நகரமாக இருந்து வருகிறது. அடுத்தபடியாக மதுரை தென் மாவட்டங்களுக்கு முக்கிய மையமாக இருந்துவருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை, ஐடி நிறுவங்களும் கட்டப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மதுரை, கோவைக்கும் மெட்ரோ ரயில் வந்துவிடும் என்று சொல்லப்பட்ட நிலையில் மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. தமிழ்நாடு அரசின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களில் கோவையில் சுமார் 39km தொலைவுக்கு, அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரை; உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை; உயர்மட்டப்பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது. மதுரையில், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31.93 km தொலைவுக்கு, மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்ப டுத்த திட்டமிடப்பட்டது. இதில், 27km உயர்மட்ட பாதையில், 23 மெட்ரோ ரயில் நிலையங்கள், 4.65km சுரங்கப்பாதையில், 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க முடிவானது.
அரசு மீண்டும் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது.
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மாநில அரசிடம் ஏற்கனவே வழங்கியது. மதுரையில் 11,360 ரூபாயிலும், 10,740 கோடி கோவையில் கோடி ரூபாயிலும் திட்டங்களை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை, மத்திய அரசிடம் மாநில அரசு வழங்கியது. மக்கள் தொகையை காரணம் காட்டி, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளை, மத்திய அரசு கடந்த வருடம் நவம்பரில் திருப்பி அனுப்பியது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க குறைந்தது, சுமார் 20 லட்சம் மக்கள்தொகை தேவை; கோவை மற்றும் மதுரையில், 15 லட்சம் மக்கள் மட்டுமே வசிப்பதால் அனுமதி அளிக்க முடியாது. முடிவை மறு பரிசீலனை செய்யும்படி, இந்திய பிரதமர் தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். திட்ட அறிக்கையில் திருத்தம் செய்து, கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட மத்திய அறிக்கையை, அரசு மீண்டும் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது.
பிற்கால போக்குவரத்திற்கு மெட்ரோ ரயில் அவசியம்
'மெட்ரோ ரயில் திட் செயல்படுத்தும் அளவுக்கு, மதுரை, கோவையில் மக்கள் தொகை இல்லை. இந்தநகரங்களில் மெட்ரோ பயண ரயில் திட்டம் நேரம் அமைவதால். குறையவாய்ப்பில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பதிலாக, பேருந்துக்ளுக்கு மட்டும் பிரத்யேக வழி அமைத்து, அதில் பேருந்துகளை மட்டுமே இயக்கும், பி.ஆர்.டி.எஸ்., என்ற பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தை' மேம்படுத்தலாம்' என, மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2வது முறையாக, மதுரை, கோவை மெட்ரோ திட்ட அறிக்கையை, மத்திய அரசு நிராகரித்துள்ளது, என தமிழக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரையில் தற்போது நிலவும் போக்குவரத்து சூழலை கருத்தில் கொண்டு மெட்ரோ திட்டம் அவசியம் தேவை என சமூக் ஆர்வலர்களும் கருதுகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















