மேலும் அறிய

ஆன்லைன் பண மோசடி தொடர்பான புகார்களை 1930 என்ற எண்ணில் அளிக்கலாம்

ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்க 1930 எனும் தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிக நன்மை இருப்பதோடு, சில தீமைகளும் ஏற்படுகின்றன. நவீன காலத்துக்கு ஏற்ப திருடர்களும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடுகின்றனர். வீட்டில் பணம் இருந்தால் திருடு போகும் என்று வங்கியில் செலுத்துகிறோம். ஆனால் நவீன திருடர்கள் நமது வங்கி கணக்கில் புகுந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர். இதற்கு ஒவ்வொரு ஆசாமியும் ஒவ்வொரு யுக்தியை கையாளுகின்றனர்.


ஆன்லைன் பண மோசடி தொடர்பான புகார்களை 1930 என்ற எண்ணில் அளிக்கலாம்

இதில் குறிப்பாக வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று குறுந்தகவலுடன் இணையதள இணைப்பை (லிங்க்) செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவார்கள். அதை கிளிக் செய்து ஆதார், செல்போன், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை கொடுத்ததும், செல்போனுக்கு ஓ.டி.பி. எண் வருகிறது. அதை நாம் மோசடி நபர்களிடம் கூறியதும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுகின்றனர்.


ஆன்லைன் பண மோசடி தொடர்பான புகார்களை 1930 என்ற எண்ணில் அளிக்கலாம்
அதேபோல் கடன் வழங்கும் செல்போன் செயலிகள், பரிசு தொகை விழுந்ததாக குறுந்தகவல், ஆன்லைன் மார்க்கெட்டிங் என பலவகையில் மோசடி நடக்கிறது. இதன்மூலம் பொது மக்களுக்கு தெரியாமலேயே அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர். அதுபற்றி செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்த பின்னரே வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவருகிறது. அதன்பின்னரே பாதிக்கப்பட்ட மக்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிகின்றன. அதுபற்றி விசாரித்து பலரின் பணத்தை போலீசார் மீட்டு திரும்ப ஒப்படைத்து உள்ளனர். அதே நேரம் பெரும்பாலான மோசடி நபர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் மோசடி நபர்கள் எளிதில் சிக்குவது இல்லை. ஆனால் மோசடி குறித்து உடனடியாக புகார் அளித்தால் மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்டு விடலாம்.


ஆன்லைன் பண மோசடி தொடர்பான புகார்களை 1930 என்ற எண்ணில் அளிக்கலாம்

இதுகுறித்து சைபர் கிரைம் போலிசார் கூறுகையில், நமது செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.களில் வரும் தேவையற்ற இணையதள இணைப்புகளில் செல்ல கூடாது. அதன்மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர்கள் பணத்தை எடுத்துவிட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும். அதன்மூலம் மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்டு விடலாம் என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

 

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget