மேலும் அறிய

Crime : ’மனைவியுடன் பழகுவதை நிறுத்து’.. ஆர்டர் போட்ட நண்பர்.. கேட்காததால் நடந்த பயங்கரம்..

மனைவியுடன் பழகியதை கண்டித்தும் கேட்காததால் தச்சு தொழிலாளியை, மீன் வியாபாரி வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (36). இவர் அப்பகுதியில் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39). இவர் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.  நண்பர்களான இவர்கள்  கருப்பசாமி அடிக்கடி ஜெயபிரகாஷ் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது ஜெயபிரகாஷ் மனைவிக்கும் கருப்பசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைக்கண்ட ஜெயபிரகாஷ் மனைவியுடன் பழகுவதை நிறுத்துமாறு கண்டித்தார். ஆனால் கருப்பசாமி அதை கேட்காமல் மீண்டும் பழகி வந்ததாக  கூறப்படுகிறது.


Crime : ’மனைவியுடன் பழகுவதை நிறுத்து’.. ஆர்டர் போட்ட நண்பர்.. கேட்காததால் நடந்த பயங்கரம்..

இதனால் ஜெயபிரகாஷ் அங்கிருந்து தனது குடும்பத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போடி பரமசிவன் கோவில் தெருவில் குடியேறினார். ஆனால் மீண்டும் கருப்பசாமி அவரது மனைவியுடம் பழகி வந்ததாக  கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ் அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராசிங்காபுரம் அருகே பொட்டிபுரம் சாலையில் ஒழுகால் பாதை அருகே ஜெயபிரகாஷ் நின்று கொண்டிருந்தார். அங்கிருந்து அவர் கருப்பசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னிடம் பேச வேண்டும் என்று கூறி அங்கு வரவழைத்தார். இதையடுத்து அங்கு கருப்பசாமி வந்தார். பின்னர் 2 பேரும் நின்று பேசி கொண்டிருந்தனர்.


Crime : ’மனைவியுடன் பழகுவதை நிறுத்து’.. ஆர்டர் போட்ட நண்பர்.. கேட்காததால் நடந்த பயங்கரம்..

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயபிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து மீனை வெட்டுவதுபோல் கருப்பசாமியின் உடலில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வௌ்ளத்தில் நிலை குலைந்த அவர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக கிடந்தார். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வௌ்ளத்தில் கிடந்த கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே ஜெயபிரகாஷ் மீன் வெட்டும் கத்தியுடன் போடி  காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஜெயபிரகாஷ் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில், கருப்பசாமியும், நானும் நெருங்கிய நண்பர்கள். இதனால் அவர் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது எனது மனைவிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் தனது மனைவியுடன் பழகுவதை நிறுத்துமாறு அவரிடம் கூறினேன். ஆனால் அவர் கேட்காததால் அவரை வெட்டி கொலை செய்தேன் என்று கூறியிருந்தார். மனைவியுடன் பழகியதை கண்டித்தும் கேட்காததால் தச்சு தொழிலாளியை, மீன் வியாபாரி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
AP Assembly Elections: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்த பிரபலங்கள்!
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்தபிரபலங்கள்!
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Lok Sabha Election 2024 LIVE: பெரும் பதற்றம்! ஆந்திராவில் வாக்கு இயந்திரங்கள் அடித்து உடைப்பு
Lok Sabha Election 2024 LIVE: பெரும் பதற்றம்! ஆந்திராவில் வாக்கு இயந்திரங்கள் அடித்து உடைப்பு
Embed widget