தேனி : விசாரணைக்கு சென்ற காவலர்களை மது போதையில் அரிவாளால் வெட்ட முயற்சி செய்தவர் கைது.
விசாரணைக்கு சென்ற காவலர்களை மது போதையில் அரிவாளால் வெட்ட முயற்சி செய்த வழக்கில் 4 மாதமாக தலைமறைவாக இருந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பிரபாகர் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 02.07.2023 அன்று மாலை தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் இருவரும் கஞ்சா மற்றும் மது போதையில் பிரபாகரன் என்பவரது வீட்டிற்கு அரிவாள் மற்றும் கத்தியுடன் சென்ற போது பிரபாகரன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தங்கை ஹேமலதா வெளியே வந்த போது ஹேமலதாவை கத்தியால் அவரது உடையை கிழித்து வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியதாகவும் அப்பொழுது ஹேமலதா அவசர எண் 100க்கு அழைத்து கத்தி மற்றும் அரிவாளுடன் இருவர் தகராறு செய்வதை புகார் தெரிவித்ததோடு உடனடியாக ஹேமலதா மற்றும் அவரது தாயை அழைத்துக்கொண்டு பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இத்தகவல் அறிந்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திலிருந்து செந்தமிழன் மற்றும் தினேஷ் என்ற இரு காவலர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றபொழுது தகராறில் ஈடுபட்ட தீபக் ரவிச்சந்திரன் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும் காவலர்களிடம் இடுப்பில் மதுபாட்டில் கதை சொருகிக்கொண்டு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் காமராஜ் என்ற இளைஞர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து விசாரணைக்கு சென்ற காவலரை வெட்டினால் தலை துண்டாக போய்விடும் என அறிவாளை ஓங்கி மிரட்டி தகராறில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு இருந்த சிலர் அருவாளை எடுத்து வெட்ட வந்த காமராஜர் தடுத்து நிறுத்தியதோடு காவலர்களையும் அங்கிருந்து செல்லுமாறு அனுப்பி வைத்ததை தொடர்ந்து காவல்துறையினர் காவல் நிலையம் திரும்பி சென்று நடந்த சம்பவத்தை காவல் ஆய்வாளர் இடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவத்தை அறிந்த தென்கரை காவல்துறை ஆய்வாளர் ஜோதி பாபு மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு காவலர்களை தகாத வார்த்தையில் திட்டியும் காவல்துறையினரை வெட்ட வந்தவர்களை கைது செய்ய சென்றபொழுது அரிவாளை எடுத்து வெட்டி விடுவேன் என்று கூறிய இளைஞரான காமராஜ் தப்பி ஓடிய நிலையில் தீபக் ரவிச்சந்திரன் என்ற இளைஞரை மட்டும் காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய காமராஜ் என்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு வழக்கம் போல் வெளியூர் சென்று தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் காவலர்களை அரிவாளால் வெட்ட வந்த காமராஜ் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு வந்த தகவலை அடுத்து தென்கரை காவல்துறையினர் அவரை சின்னமனூர் சென்று சுற்றி வளைத்து கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.
Before You Go
TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
ட்ரெண்டிங் செய்திகள்






















