மேலும் அறிய

தேனி : விசாரணைக்கு சென்ற காவலர்களை மது போதையில் அரிவாளால் வெட்ட முயற்சி செய்தவர் கைது.

விசாரணைக்கு சென்ற காவலர்களை மது போதையில் அரிவாளால் வெட்ட முயற்சி செய்த வழக்கில் 4 மாதமாக தலைமறைவாக இருந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பிரபாகர் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான  காமராஜ் ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது.


தேனி : விசாரணைக்கு சென்ற காவலர்களை மது போதையில் அரிவாளால் வெட்ட முயற்சி செய்தவர் கைது.

இந்நிலையில் 02.07.2023 அன்று மாலை தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பரான காமராஜ் இருவரும் கஞ்சா மற்றும் மது போதையில் பிரபாகரன் என்பவரது வீட்டிற்கு அரிவாள் மற்றும் கத்தியுடன் சென்ற போது பிரபாகரன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தங்கை ஹேமலதா வெளியே வந்த போது ஹேமலதாவை கத்தியால் அவரது உடையை கிழித்து வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியதாகவும் அப்பொழுது ஹேமலதா அவசர எண் 100க்கு அழைத்து கத்தி மற்றும் அரிவாளுடன் இருவர் தகராறு செய்வதை புகார் தெரிவித்ததோடு உடனடியாக ஹேமலதா மற்றும் அவரது தாயை அழைத்துக்கொண்டு பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர்.


தேனி : விசாரணைக்கு சென்ற காவலர்களை மது போதையில் அரிவாளால் வெட்ட முயற்சி செய்தவர் கைது.

இதனைத் தொடர்ந்து இத்தகவல் அறிந்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திலிருந்து செந்தமிழன் மற்றும் தினேஷ் என்ற இரு காவலர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றபொழுது தகராறில் ஈடுபட்ட தீபக் ரவிச்சந்திரன் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும்  காவலர்களிடம் இடுப்பில் மதுபாட்டில் கதை சொருகிக்கொண்டு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் காமராஜ் என்ற இளைஞர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து விசாரணைக்கு சென்ற காவலரை வெட்டினால் தலை துண்டாக போய்விடும் என அறிவாளை ஓங்கி மிரட்டி தகராறில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அங்கு இருந்த சிலர் அருவாளை எடுத்து வெட்ட வந்த காமராஜர் தடுத்து நிறுத்தியதோடு காவலர்களையும் அங்கிருந்து செல்லுமாறு அனுப்பி வைத்ததை தொடர்ந்து காவல்துறையினர் காவல் நிலையம் திரும்பி சென்று நடந்த சம்பவத்தை காவல் ஆய்வாளர் இடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவத்தை அறிந்த தென்கரை காவல்துறை ஆய்வாளர் ஜோதி பாபு மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு காவலர்களை தகாத வார்த்தையில் திட்டியும் காவல்துறையினரை வெட்ட வந்தவர்களை கைது செய்ய சென்றபொழுது அரிவாளை எடுத்து  வெட்டி விடுவேன் என்று கூறிய இளைஞரான காமராஜ் தப்பி ஓடிய நிலையில் தீபக் ரவிச்சந்திரன் என்ற இளைஞரை மட்டும் காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


தேனி : விசாரணைக்கு சென்ற காவலர்களை மது போதையில் அரிவாளால் வெட்ட முயற்சி செய்தவர் கைது.

மேலும் தப்பி ஓடிய காமராஜ் என்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு வழக்கம் போல் வெளியூர் சென்று தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் காவலர்களை அரிவாளால் வெட்ட வந்த காமராஜ் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு வந்த தகவலை அடுத்து தென்கரை காவல்துறையினர் அவரை சின்னமனூர் சென்று சுற்றி வளைத்து கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேடசந்தூரில் ரவுடியின் அட்டகாசம்: மாமூல் தர மறுத்ததால் பட்டாக்கத்தியால் மளிகை கடை மீது தாக்குதல்! CCTV காட்சி வெளியீடு
வேடசந்தூரில் ரவுடியின் அட்டகாசம்: மாமூல் தர மறுத்ததால் பட்டாக்கத்தியால் மளிகை கடை மீது தாக்குதல்! CCTV காட்சி வெளியீடு
திண்டுக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்: மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்!
திண்டுக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்: மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்!
தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!
தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Embed widget