மேலும் அறிய
புதுக்கோட்டை நீர்நிலை ஆக்கிரமிப்பு: தார் சாலைகளை அகற்ற உத்தரவு; அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!
ஆக்கிரமப்புகள் குறித்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கது நீதிபதிகள் அரசுக்கு பாராட்டு.

மதுரைக் கிளை
நீர்நிலை ஆக்கிரமப்புகள் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வியப்பாக உள்ளது, இது போன்று அறிக்கைகள் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது- அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு.
பொதுநல வழக்கு.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சார்ந்த காசிராஜன் தாக்கல் செய்த பொதுநல வழக்கு. நீர்நிலை புறம்போக்குகளில் அரசு, தனியார் நிர்வாகமும் எந்த ஒரு கட்டுமானங்களும் கட்டக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குமாரமங்கலம் ஊராட்சியில் தேவளி பெரியகுளம் உள்ளது இந்தக் குளம் இப்பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக உள்ளது இந்நிலையில் இந்த நீர் நிலை பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் கட்டிடங்கள் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பகுதியை சார்ந்த சிலர் தங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வீட்டுமனை DTCP அப்ரூவல் வழங்க உரிய பாதை வசதி இல்லை இதனால் நீர்நிலை பொறம்போக்கு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து ஊராட்சி அதிகாரிகள் உதவியுடன் முறைகேடாக பட்டாக்கள் பெற்று தற்போது தார் சாலைகள் அமைத்து வருகின்றனர் இதன் மூலம் தங்கள் நிலங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளனர்.
நீர் நிலைகள் தான் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இவ்வாறு நடைபெற்றால் இந்த பகுதியின் தேவளி பெரியகுளம் விவசாய நீர் மாசுபடும் விவசாயத்துக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் மேலும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அழிவுக்கு உள்ளாகும் எனவே பகுதியில் சட்டவிரோதமாக பெறப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி தார் சாலை போடப்பட்டுள்ள பகுதிகள் நீர் நிலைகள் தான் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அப்புறப்படுத்த வேண்டும்
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என பல்வேறு உத்தரவுகள் போடப்பட்டிருந்தாலும் தொடர்ந்து இந்நிலை நீடித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மூன்று மாதத்தில் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் மூன்று மாதம் கழித்து மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் அப்பொழுது நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இதேபோல் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் புகார் குறித்து உரிய அளவீடு செய்து ஆக்கிரப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் மனு தாக்கல் செய்தனர்.
அறிக்கை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது
அப்பொழுது நீதிபதிகள் இதுபோன்று பதில் அறிக்கை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத சூழல் இருந்தது தற்போது அரசே அக்கிரமிப்புகள் அகற்றப்படும் என பதில் மனு தாக்கல் செய்வது பார்க்கும்போது வியப்பாக உள்ளது எனவே இந்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துகிறது இதுதான் உண்மையான மாற்றம் இந்த நிலை தொடர வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















