மேலும் அறிய

பர்தா போடாத மனைவி! விவாகரத்து கேட்ட கணவன்! - நீதிமன்றம் தக் லைஃப் உத்தரவு!

அலகாபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் மனரீதியான கொடுமை மற்றும் மனைவி பிரிந்து சென்றதன் அடிப்படையில் கீழமை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார்.

மனைவி பர்தா கடைப்பிடிக்காதது மன ரீதியான கொடுமையின் அடிப்படையில் விவாகரத்து பெற உரிமை உண்டு என்ற கணவரின் வாதத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

அலகாபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் மனரீதியான கொடுமை மற்றும் மனைவி பிரிந்து சென்றதன் அடிப்படையில் கீழமை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார். ஆனால் நீதிமன்றம் விவாகரத்து தர முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 

இந்த மனுவை நீதிபதிகள் சவுமித்ரா தயாள் சிங் மற்றும் டோனாடி ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது பேசிய நீதிபதிகள் “ உங்கள் மனைவி சுதந்திரமான ஒரு நபர். அவருக்கு சுதந்திரம் கொடுப்பதாக கூறுகிறீர்கள். அவர் சந்தைக்கும் பிற இடங்களுக்கும் தனியாகச் சென்று வருவதாகவும் 'பர்தா' கடைப்பிடிக்கவில்லை என்றும் கூறுகிறீர்கள். 

மனைவி சுதந்திரமாக விருப்பமுடையவராகவோ அல்லது எந்தவொரு சட்டவிரோத அல்லது ஒழுக்கக்கேடான உறவையும் உருவாக்காமல் தனியாகப் பயணம் செய்யும் அல்லது சிவில் சமூகத்தின் பிற உறுப்பினர்களைச் சந்திக்கும் ஒரு நபரின் செயலை கொடுமைச் செயலாக விவரிக்க முடியாது. கணவர், மனைவி இருவரும் நன்கு படித்தவர்களாக இருக்கின்றீர்கள். கணவர் ஒரு தகுதிவாய்ந்த பொறியாளர். அதே சமயம் பிரதிவாதி மனைவி ஒரு அரசு ஆசிரியர். 

வாழ்க்கையைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் தனிநபர்களின் வெவ்வேறு நடத்தைகளுக்கு வழிவகுக்கும். கருத்து மற்றும் நடத்தையின் இத்தகைய வேறுபாடுகள் மற்றவர்களால் மற்றொருவரின் நடத்தையைக் கவனிப்பதன் மூலம் கொடூரமானவை என்று விவரிக்கப்படலாம். அதே நேரத்தில், அத்தகைய கருத்துக்கள் முழுமையானவை அல்ல. 

மனைவியின் சுதந்திரம் அவர் சம்பந்தப்பட்டது. அரசு கொடுத்திருக்கும் சுதந்திரம் அனைவருக்கும் சமம். பர்தா அணிய கட்டாயப்படுத்துவதே தவறு. அதை காரணம் காட்டி விவாகரத்து கேட்கின்றீர்கள். ஒரு பெண் உடை அணிவது அவரது விருப்பம். அதேபோல ஆணுக்கும். ஆனால் அதையெல்லாம் வைத்து காரணம் காட்டி விவாகரத்து கேட்க முடியாது. 

மனைவி மீது கணவர் வைத்த குற்றச் செயல்களை நேரம், இடம் பற்றிய விவரங்களுடன் விவரிக்கவில்லை. அவை கீழே உள்ள நீதிமன்றத்தின் முன் நிரூபிக்கப்படவில்லை. 

தவிர, பிரதிவாதி (மனைவி) 'பஞ்சாபி பாபா' என்று விவரிக்கப்படும் ஒரு நபருடன் ஒழுக்கக்கேடான உறவை ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க வேறு எந்த முயற்சியும் மனுதாரர் எடுக்கவில்லை. மேலும் நேரடி அல்லது நம்பகமான ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. எனவே விவாகரத்து வழங்க முடியாது" என உத்தரவிட்டனர். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash Video: கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash Video: கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
Embed widget