மேலும் அறிய

சகிச்சுக்க முடியல? ராகுல் காந்திக்கு எதிராக கொதித்தெழுந்த குடியரசு துணைத் தலைவர்.. என்ன மேட்டர்

அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவர் தேசத்தின் எதிரியாக மாறுவதை விட கண்டிக்கத்தக்க, வெறுக்கத்தக்க, சகிக்க முடியாத விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது என குடியரசு துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய பதவிகளில் இருக்கும் சிலர் அரசியலமைப்புச் சட்டம் பற்றி அறியாமல் இருப்பது குறித்து குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வேதனையையும் ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி பேசியது என்ன?

அமெரிக்காவுக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பெண்கள் என்றாலே வீட்டில் இருந்தபடி சாப்பாட்டை சமைத்து தர வேண்டும். அதிகமாக பேசக்கூடாது என ஆர்எஸ்எஸ் விரும்புவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக கடுமையைாக எதிர்வினையாற்றியது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சை மறைமுகமாக விமர்சித்துள்ள குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், "அவர்களுக்கு பாரதத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்கு நமது தேச நலன் பற்றி எதுவும் தெரியாது.

இந்த நாடு 5000 ஆண்டுகள் பழமையான நாகரீகத்தைக் கொண்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை" என குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு வெளியே உள்ள ஒவ்வொரு இந்தியரும் இந்த நாட்டின் தூதராக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர், "அரசியலமைப்பு பதவியை வகிக்கும் ஒருவர் அதற்கு நேர்மாறாக செயல்படுவது வேதனையளிக்கிறது.

கொதித்தெழுந்த குடியரசு துணைத் தலைவர்: நீங்கள் தேசத்தின் எதிரியாக மாறுவதை விட கண்டிக்கத்தக்க, வெறுக்கத்தக்க, சகிக்க முடியாத விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், "அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முன்னோர்கள், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள், 18 அமர்வுகளுக்கு மேலாக எந்தவித இடையூறும் இல்லாமல்,  கோஷங்கள் எழுப்பாமல், சுவரொட்டிகள் உயர்த்தப்படாமல் மூன்று ஆண்டுகள் கடினமாக உழைத்ததன் விளைவாக அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

விவாதம், உரையாடல், கலந்துரையாடல் ஆகியவற்றின் இடையே  அரசியலமைப்பு செயல்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். அவர்கள் முன் இருந்த சவால்கள் இமயமலை அளவுக்கு அதிகமாக இருந்த போதிலும், அவர்கள் மிகவும் கடினமாக உழைத்தனர். இப்போது சிலர் நம் நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறார்கள். இது அதீத அறியாமை!" என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர், இந்திய மக்களாகிய நாம் அதன் ஊற்றுக்கண்ணாக இருக்கிறோம். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்காக இந்த அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.

ஆனால், யாரோ ஒருவர் இந்த நாட்டிற்கு வெளியே சகோதரத்துவத்தை துண்டு துண்டாக கிழிக்க விரும்புகிறார், இல்லாத ஒரு சூழ்நிலையை கற்பனை செய்கிறார் என்று அவர் கூறினார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...
சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...
Embed widget