Uttar Pradesh : பெண்களுக்கு நைட் ஷிப்ட் போட்டா நாக் அவுட்தான்.. எச்சரித்த உ.பி அரசு!
பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் பணியாற்றத் தடை விதிப்பதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு சனிக்கிழமை (நேற்று) வெளியிட்ட உத்தரவில், மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் எந்த ஒரு பெண் ஊழியர்கள் இரவு ஷிப்ட் செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் ஊழியர்கள் காலை 6 மணிக்கு முன் பணிக்கு அழைக்கப்படமாட்டார்கள் என்றும் இரவு 7 மணிக்கு மேல் வேலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், அவர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துப்பூர்வ சம்மதமின்றி குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் பணிபுரியக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இருப்பது உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

